புதிய திட்டங்களோடு வாடிக்கையாளர்களைக் கவர வருகிறது ஏர்டெல்!

என்னதான் முதலிடத்தில் இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்குச் சீரான இடைவெளியில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஏர்டெல் நிறுவனம் தவறியதில்லை.
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டில் ஏர்டெல் நிறுவனம் செயல்பாட்டுக்கு வந்த காலம் தொட்டு, வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த தொலைபேசிச் சேவையை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டின் எந்த இடத்துக்குச் சென்றாலும் தங்களின் தரமான மொபைல் சேவையை வழங்குவதில் ஏர்டெல் நிறுவனம் முன்னணி வகிக்கிறது. தமிழ்நாட்டில் ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய, முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாகும். தமிழ்நாட்டில் மட்டும் 23 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு தரமான சேவை வழங்குவதில் ஏர்டெல் முதலிடம் வகிக்கிறது.

என்னதான் முதலிடத்தில் இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்குச் சீரான இடைவெளியில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஏர்டெல் நிறுவனம் தவறியதில்லை. அந்த வகையில், “project-leap” என்ற புதிய திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தின்படி, 12,000 புதிய மொபைல் தளங்களை உருவாக்கி கிராமப்புற எல்லைவரை தரமான இணையதள சேவை வழங்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளதோடு, இங்குள்ள மக்களுக்கு பெரும் வர்த்தகச் சேவைகளை வழங்குவது எப்படி என்பதையும் உறுதிப்படுத்துகிறது. உங்கள் மொபைல் ஃபோனில் உள்ள கவரேஜ் முன்பைவிட இன்னும் சிறப்பாக மாறும். மற்றும் மொபைல் தளங்கள் அதி வேகமாக இயங்கும். நீங்கள் உங்கள் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அதிகமான சிக்னலைப் பெறும் மொபைல் நெட்வொர்க்கைப் பெறுவீர்கள். நீங்கள் வெவ்வேறு இடங்களில் அதி வேகத்தில் இணையதள சேவையை அனுபவிக்க முடியும்.

மொபைல் நெட்வொர்க் மட்டுமல்லாமல், ஏர்டெல் நிறுவனம் தமிழகத்திலேயே முதன்முறையாக தங்களது பிராட்பேண்ட் சேவைகளைச் சிறந்த முறையில் தமிழகத்துக்குக் கொண்டுவருவதற்கும் தயாராகிவிட்டது. அதற்காக சுமார் 3000 கி.மீ. புதிய ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கை அமைத்து, மாநிலத்தின் எல்லை வரை பிராட்பேண்ட் சேவைகளைக் கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளது. https://www.airtel.in/broadband என்ற இந்த இணைப்பை கிளிக் செய்வதன் மூலம், ஏர்டெல் நிறுவனத்தின் அற்புதமான பிராட்பேண்ட் திட்டங்களை நீங்கள் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் தன்னுடைய சேவைகளை மேம்படுத்துவதற்கு ஏர்டெல்லின் இந்த அர்ப்பணிப்பு, உண்மையில் தமிழக மக்களுக்கு ஒரு பம்பர் பரிசு என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான், ஏர்டெல் தமிழ்நாட்டின் நெம்பர் 1 நெட்வொர்க்காகத் திகழ்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com