வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பேக்கேஜிங்கிலிருந்து ஒழிக்க டப்பர்வேர் இந்தியா முடிவு!

புது தில்லி, சமையலறைப் பொருட்கள் மற்றும் சமையல் பிராண்டான டப்பர்வேர் இந்தியா அக்டோபர் 1 முதல் தயாரிப்பு பேக்கேஜிங்கிற்கான ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துவதாகவும், அதற்கு பதிலாக

News image
Updated On :1 அக்டோபர் 2019, 10:27 am

புது தில்லி, சமையலறைப் பொருட்கள் மற்றும் சமையல் பிராண்டான டப்பர்வேர் இந்தியா அக்டோபர் 1 முதல் தயாரிப்பு பேக்கேஜிங்கிற்கான ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துவதாகவும், அதற்கு பதிலாக மறுசுழற்சி செய்யக்கூடிய காகித அடிப்படையிலான உரம் தயாரிக்கும் பேக்கேஜிங் பொருளைப் பயன்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்த மாற்றம் நிறுவனத்தின் செலவினங்களை சுமார் 7 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது, ஆனால் இந்த செலவினத்தை நுகர்வோர் தலையில் கட்ட நிறுவனம் அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளது.

"ஆறு மாதங்கள் முழுமையான ஆராய்ச்சி, இந்தியாவில் இந்த முயற்சிக்கான ஆரம்ப சோதனை மற்றும் இதற்கான சர்வதேச சந்தைகளைத் தேர்ந்தெடுத்த பிறகு, டப்பர்வேர் இந்தியா எதிர்காலத்தில் தனது அனைத்து உற்பத்திகளுக்கும் அக்டோபர் 1, 2019 முதல் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பேக்கேஜைத் தவிர்த்து விட்டு கம்போஸ்டபிள் பேக்கேஜிங் பொருட்களுக்கு மாறத் தற்போது தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த முயற்சி குறித்து டப்பர்வேர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் தீபக் சாப்ரா பேசுகையில்..

‘எங்கள் உலகளாவிய பார்வையான 'வீணடிக்க நேரமில்லை' எனும் முன்னெடுப்பானது.. தயாரிப்பு கண்டுபிடிப்பு, பேக்கேஜிங் குறைப்பு, செயல்பாட்டு இலக்குகள் மற்றும் மூலோபாய கூட்டாண்மை மூலம் பிளாஸ்டிக் மற்றும் உணவுக் கழிவுகளை கணிசமாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது."

நிறுவனத்தின் கூற்றுப்படி, 100 சதவீத மறுசுழற்சி செய்யக்கூடிய விதத்திலான இந்த கம்போஸ்டபிள் பேக்கேஜிங் (மட்கும் & மறு சுழற்சி செய்யத் தகுதியான பிளாஸ்டிக்) சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது மட்டுமல்லாமல், இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா முழுவதும் நடத்தப்பட்ட அனைத்து பாதுகாப்பு சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளது.

Related Article

புதர் வேடமிட்டு சகோதரியின் திருமண புரப்போஸல் தருணத்தை கேமிராவில் சிறைபிடித்த தங்கை!

புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்வது ஏன்?

பெங்களூரு பயணியின் மனதைக் குளிர வைத்த ஓலா ஓட்டுநரின் நற்செய்கை!

‘கடைசிக் காலத்தில் கவனித்துக் கொள்பவர்களுக்கு சொத்தில் பெரும்பான்மை அளிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு’ உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

சூப்பர் மாம் / சூப்பர் டாட் ஆக என்ன செய்யனும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.