விருந்தினர்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலித்த மணமகள்! எதற்காகத் தெரியுமா?

அமெரிக்காவில் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களிடம் மணமகள் நுழைவுக் கட்டணம் வசூலித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
விருந்தினர்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலித்த மணமகள்! எதற்காகத் தெரியுமா?

அமெரிக்காவில் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களிடம் மணமகள் நுழைவுக் கட்டணம் வசூலித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமணம் ஒன்றில் ஒரு விநோதமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. உறவினர்கள், நண்பர்கள் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனில், நுழைவுக் கட்டணமாக 50 டாலர்(இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.3500) வழங்க வேண்டும் என்று மணமகள் நிபந்தனை விதித்துள்ளார். 

அதுமட்டுமின்றி, நுழைவுக் கட்டணம் செலுத்துபவர்களுக்கு திருமண விழாவில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர்கள் எங்கும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் 'பிரத்யேக விருந்தினர் பட்டியலில்' இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். அதன்படி, பலரும் பணம் செலுத்தியுள்ளனர்.

மணமகளின் உறவினர் ஒருவர் திருமணம் நடக்கும் இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டபோது, அந்த பெண்ணின் பெற்றோர்கள் பணம் கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால், அந்த பெண் அதனை தடுத்ததோடு மணமகளின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னரே இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

திருமணத்திற்கு ஆகும் செலவுகளை ஈடுசெய்ய, மணமகள் மற்றும் மணமகளின் வீட்டார் சிலர் சேர்ந்து இந்த நிபந்தனைகளை விதித்தது தெரிய வந்தது. 

திருமணங்கள் என்றாலே செலவு அதிகமாகத்தான் இருக்கும். திருமணத்தின்போது உறவினர்களும், நண்பர்களும் மணமக்களுக்கு தாமாக பரிசுகளை வழங்குவது வழக்கம்.

இந்த சூழ்நிலையில் திருமணச் செலவை ஈடுசெய்ய விருந்தினர்களிடம் கட்டாயமாக பணம் வசூல் செய்த மணமகளின் செயல் உண்மையிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக விழாவில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com