மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற...

மனித உடலுக்கு ஓய்வு என்பது மிகவும் அத்தியாவசியமானது. அந்தவகையில் நாள் முழுக்க செயல்பாட்டில் இருக்கும் நமக்கு இரவுத் தூக்கம் அவசியமானது.

News image
கோப்புப்படம்
Updated On :10 நவம்பர் 2020, 7:37 am

DIN

மனித உடலுக்கு ஓய்வு என்பது மிகவும் அத்தியாவசியமானது. அந்தவகையில் நாள் முழுக்க செயல்பாட்டில் இருக்கும் நமக்கு இரவுத் தூக்கம் அவசியமானது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டினாலும், மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் தூக்கத்தைத் தொலைக்கின்றனர். 

நம் உடல் மற்றும் மன செயல்பாடுகள் அனைத்திற்கும் உணவுப் பழக்கமுறையே மிக முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது, நாம் ஊட்டச்சத்து மிக்க சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். 

ஆனால், இந்த தூக்கமின்மை பிரச்னைக்கு தற்காலிகத் தீர்வுகள் பல உள்ளன. இரவில் தூக்கத்திற்கு முன்னர் சில நீர் ஆகாரங்களை எடுத்துக்கொண்டால் நல்ல அமைதியான தூக்கம் கிடைக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் நன்றாகத் தூங்கினால் மட்டுமே அடுத்த நாள் சுறுசுறுப்பாக இருக்க முடியும். 

► சாதாரணமாக இரவில் தூங்குவதற்கு முன் பால் குடிப்பதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது தூக்கத்திற்கு அவசியமான ஒன்று. ஆனால், பாலில் சர்க்கரை தவிர்த்து வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை சேர்க்கலாம்.

► பாலில் ஒரு டீ ஸ்பூன் அளவு தேன் கலந்து தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக அருந்தலாம். 

► சாதாரண பாலுக்கு பதிலாக பாதாம் பாலும் குடிக்கலாம். 

► இரவில் டீ குடிக்கலாம், ஆனால் காபி குடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் காபி நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. 

► நல்ல வெதுவெதுப்பான நீரில் புதினாவைப் போட்டு கொதிக்க விட்டு இறுதியில் சிறிது எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடித்தால் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

► அதேபோன்று தூங்கும் முன் இஞ்சி டீ குடிக்கலாம். இஞ்சி டீ குடிப்பதால் இரவு சாப்பிட்ட உணவுகள் எளிதில் செரிமானமாகி நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெற முடியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.