மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பை அடுத்தாண்டு அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்
Updated On :1 நவம்பர் 2021, 12:38 pm

தினமணி

ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பை அடுத்தாண்டு அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுமையான தயாரிப்புகளைத் தனித்த அடையாளங்களுடன் வெளியிடும் ஆப்பிள் நிறுவனம் புதுமையான சிப்ஸ் , உணரிகள் , திரை வசதியுடன் தன்னுடைய புதிய ஹெட்செட்டை அடுத்தாண்டு வெளியிட இருப்பதாக மார்க் குர்மன் நியூஸ் லெட்டர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

இயர்போன்களின் தேவையும் அதன் தொழில்நுட்பத் திறனும் அதிகரித்து வரும் நிலையில் விடியோ கேம்களை விளையாட ஏதுவாக ஏஆர், விஆர் வசதியுடன் புதிய ஹெட்செட்டை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வருகிறது. 

‘மிக்ஸுடு ரியாலிட்டி’ என்கிற பெயரில் அறிமுகமாகும் இந்த ‘ஹெட்செட்’ வாடிக்கையாளர் பயன்பாட்டிற்காக இல்லாமல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் தொழில்முறை அதிகாரிகளுக்காகவும் தயாராகி வருகிறது.

இதுகுறித்து ஆப்பிள் ஆய்வாளரான மிங் ஜி கு , ‘பயனர்களை இணைக்கும் தொழில்நுட்பப் புரட்சியில் புதிய அலையாக இது இருக்கும் ‘ எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அடுத்து  ஆப்பிள் ஹெட்செட்களில் ஏஆர் வசதியுடன் வெளியாகுபவைகளில் வெளிப்புற கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஹெட்செட் 15 கேமராக்களை உள்ளடக்கி கண்களை கண்காணிக்கும் வசதியுடன் 2000- 3000 டாலர் செலவில் உருவாக்கப்படுகிறது.

மேலும் உயர்தொழில்நுட்பத் திரையுடன்  அணிபவர்கள் நீண்ட நேரம் சுற்றித் திரிவதற்கு வசதியாக எடை குறைந்ததாகவும் இந்த ஏஆர் ஹெட்செட் ஒரு நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.