சருமப் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வு கற்றாழை!

கோடை காலமானாலும் சரி, குளிர்காலமானலும் சரி சரும பராமரிப்புக்கு சிறந்தத் தீர்வு கற்றாழை. 
கற்றாழை
கற்றாழை

கோடை காலமானாலும் சரி, குளிர்காலமானலும் சரி சருமப் பிரச்னைகளுக்கு சிறந்தத் தீர்வு கற்றாழை. 

கோடை காலத்தில் அதிக தூசு படிவதால் முகத்தில் எரிச்சல், அரிப்பு, பருக்கள், வெப்பத்தால் கட்டிகள் போன்றவை ஏற்படும், அதேபோன்று குளிர்காலத்தில் சருமவறட்சி என்பது பொதுவாக அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்னை. சரும செல்களில் அழுக்கு படிவதே இதற்குக் காரணம். 

சரும செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. இதற்காக செயற்கைப் பொருள்களை நாடாமல் வீட்டிலுள்ள கற்றாழையைக் கொண்டே சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சரும பிரச்னைகள் நீக்கி, சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.

கற்றாழை ஜெல்லை நன்றாக கழுவிவிட்டு அப்படியே முகத்தில் தடவ பயன்படுத்தலாம். 

கற்றாழை ஜெல்லுடன் சிறிது மஞ்சள் தூள், பால், தேன் கலந்த கலவையினை முகத்தில் பேக் போடலாம். 

மேலும் கற்றாழை ஜெல், தயிர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்தும் பயன்படுத்தலாம்.  

அதேபோல எலுமிச்சை சாறுடன் கற்றாழை ஜெல்லை கலந்து தடவ முகம் பொலிவு பெறும். 

கற்றாழை ஜெல் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை பாதுகாப்பதுடன் பொலிவடையச் செய்கிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்கிறது. எனவே கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்திவர சருமம் அழகாகும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com