ஹோலி பண்டிகை விரைவில் கொண்டாடப்படவிருக்கிறது. பல குடும்பங்கள் ஒன்றாக இணைந்து ஹோலி கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
ஹோலி கொண்டாடும் மக்கள் இருக்கும் பகுதிகளில், வீட்டை விட்டு வெளியே வந்தாலே, வண்ணப் பொடிகள் கலந்த நீரை ஊற்றுவார்கள். இது மகிழ்ச்சி அளித்தாலும், கையிலிருக்கும் விலை உயர்ந்த செல்லிடப்பேசிகளை இதிலிருந்து பாதுகாப்பது எப்படி என்ற அச்சம் உங்களை வாட்டுகிறதா?
வாருங்கள் கவலையைப் போக்கும் வழிகள் என்னவென்று பார்க்கலாம்.
உங்களது இயர்போன்களின் இயர்பட்ஸ்களில் கிளிசரின் அல்லது மாய்ஸ்சுரைசர் க்ரீம்களை தடவி வையுங்கள். ஒருவேளை அதில் வண்ணப் பொடிகள் பட்டுவிட்டாலும் லேசான துடைத்தாலே போய்விடும்.
ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்போர், கைவசம் ஸிப்லாக் பேக் அல்லது வாட்டர்ப்ரூஃப் பௌச்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். எங்கெல்லாம் தண்ணீர் அடித்துக் கொண்டாட்டங்கள் நடக்கிறதோ, அங்கு இந்த பைக்குள் உங்கள் செல்லிடப்பேசிகளை வைத்து விட்டு கவலையின்றி ஆட்டம் பாட்டங்களில் ஈடுபடுங்கள்.
தற்காலிகமாக, செல்லிடப்பேசிகளில் சார்ஜரை நுழைக்கும் இடம் ஸ்பீக்கர் போன்று திறந்திருக்கும் துளைகளில் டேப் கொண்டு ஒட்டி வைத்தும் கொள்ளலாம்.
இதுபோன்று ஸிப் லாக் கவரிலோ, டேப் போட்டு ஒட்டும் போதோ உங்கள் செல்லிடப்பேசிகளை சைலண்ட் மோடில் வைக்கவும். இதுவும் செல்லிடப்பேசியை பாதுகாக்க பெரிதும் உதவும்.
இதையும் படிக்க.. ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 'பழைய சோறு': கிடைத்திருக்கும் நல்ல செய்தி
தண்ணீர் ஊற்றும் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் போது பயோமெட்ரிக் லாக் பதிலாக பாட்டர்ன் லாப் பயன்படுத்துங்கள். உங்கள் கைகள் ஈரமாக இருக்கும் போது பயோமெட்ரிக் பயன்படுத்த முடியாத நிலை உருவாகலாம்.
ஒருவேளை, செல்லிடப்பேசி ஈரமாகிவிட்டாலோ அல்லது ஸிப் லாக் பையிலிருந்து எடுத்த உடனேயோ அதனை சார்ஜ் போட வேண்டாம். வெளியில் உலர்த்திய பிறகே சார்ஜ் போட வேண்டும்.