நவீன உலகத்தில் தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப உணவு முறைகளும் மாறி வருகின்றன. எடுத்துக்கொள்ளும் உணவுகள், சாப்பிடும் முறை என உணவுப் பழக்கவழக்கங்கள் பெருமளவில் மாறிக்கொண்டு இருக்கின்றன.
அந்தவகையில் இன்று பழங்களை நேரடியாக சாப்பிடுவதற்குப் பதிலாக பெரும்பாலானோர் ஜூஸைத் தான் விரும்புகிறார்கள். அதிலும் ஏபிசி ஜூஸ் போன்ற கலவையான ஜூஸ். ஏபிசி(ABC) என்பது ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் சேர்ந்தது.
இதன் தொடர்ச்சியாக தற்போது க்ரீன் ஜூஸ் ட்ரெண்டாகி வருகிறது. க்ரீன் ஆப்பிள், வெள்ளரி என இயற்கையான பச்சைக் காய்கறிகள், கொத்தமல்லி, புதினா என பச்சை நிறங்களில் உள்ள உணவுப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. உடலுக்குத் தேவையான அனைத்து வகை சத்துகளையும் உள்ளடக்கிய பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதாலும் பிரபலங்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாலும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் படிக்க | தீராத தலைவலியா? இயற்கையாக சரிசெய்ய 5 எளிய வழிகள்!
பல காய்கறிகள், பழங்கள் இதில் இருப்பதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து இதில் கிடைக்கிறது. இதய நோய் பாதிப்பு குறைவு, உடலில் கொழுப்பைக் கரைப்பது என அந்தந்த உணவின் சத்துகள் சேர்ந்து கிடைக்கின்றன.
ஆனால், அதே நேரத்தில் அதன் சுவை சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். சிலருக்கு அழற்சி கூட ஏற்படலாம். அவ்வாறு இருந்தால் தவிர்த்துவிடலாம். ஏனெனில், உடலுக்குத் தேவையான ஒட்டுமொத்த ஊட்டச்சத்தையும் ஒரே நேரத்தில் நாம் அளிக்க வேண்டும் என்று அவசியமில்லை.
தேவைப்பட்டால் உங்களுக்குப் பிடித்த காய்கறிகள், பழங்களை மட்டும் சேர்த்தோ தனித்தனியாகவோ ஜூஸ் செய்து சாப்பிடலாம்.
இதையும் படிக்க | 'கண்கள் முக்கியம்' - மறந்தும் இதையெல்லாம் செஞ்சுடாதீங்க!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!

நெல்லுக்கு நடப்பாண்டில் ரூ.3000, அடுத்த ஆண்டில் ரூ.3500 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும்: அன்புமணி

உலகச் செம்மொழிகளும் இந்தியாவில் செம்மொழி அரசியலும்!

”மாண்புமிகு சாமி அமைச்சர்!” MRK பன்னீர்செல்வத்தின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! தனித் தீர்மானம் நிறைவேற்றம்! | TN Assembly | TVK


