எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. அவர் நல்லவராவதும்.. தீயவராவதும்.. ஆம் பெற்றோர் கையில்தான். இப்போது இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால் பிள்ளைகள் கையில் இருக்கும் செல்லிடப்பேசியில்தான் என்று கூட சொல்லிவிடலாம்.
நாம் இப்போது செல்லிடப்பேசியில் நேரத்தை செலவிடுவதைப் பற்றி பேசப்போவதில்லை. அது பற்றி பேசி எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் காலம் கடந்தே விட்டது.
இதையும் படிக்க | இனி வாட்ஸ்ஆப்பிலேயே பிஎன்ஆர், ரயில் ஸ்டேடஸ் அறியும் வசதி!
இனி பிள்ளைகள் பெற்றோர் இல்லாமல் கூட இருப்பார்கள் கையில் செல்லிடப்பேசி இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்ற நிலையை காலக்கொடுமை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.
நேராக விஷயத்துக்கு வரலாம்.. பிள்ளைகளை துணிச்சலாகவும், அதிக தைரியம் கொடுத்தும் வளர்க்க வேண்டும். ஏனெனில் சமூகத்தில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுதான். அதற்காக அவர்கள் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க வைக்கக் கூடாது. அவர்களுக்கு நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்துவிட்டு, அவர்களே அதனைக் கண்டறிந்து தெளிவுபெற வைக்க வேண்டும்.
மகன் அல்லது மகள் என்றில்லை, பொதுவாகவே பிள்ளைகளை தைரியமாக வளர்ப்பதில் பெற்றோரின் பெரும் பங்கு இருக்கிறது.
சரி ஓரளவுக்கு வளர்ந்துவிட்ட நமது பிள்ளைகளிடம் சில கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். அவர்களுக்கு அதற்கான பதில்கள் தெரிந்திருக்கலாம், சொல்லத் தெரியாமல் கூட போகலாம். ஆனால் அது தொடர்பான சிந்தனையை அது தூண்டிவிடும்.
எனவே, மகனோ மகளோ இந்தக் கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சிந்தனையின் ஓட்டத்தை உணரலாம்.