பண்டைக் காலங்களில் கடல் கடந்து வணிகம் செய்தவர்களின் முக்கிய வர்த்தக பொருளாக இப்பயிர் இருந்துள்ளது. இதில் ஜாதிக்காய் அதன் பயன்பாட்டு அடிப்படையில், உலகப் பிரசித்தி பெற்ற நறுமணப்பயிராக உள்ளது.
ஜாதிக்காயின் பிறப்பிடம் இந்தோனேசியாவின் பான்டா தீவுகளாகும். மலேசியாவில் பினாங்கிலும் ஜாதிக்காய் அதிகமாக விளைகிறது. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையை உள்ளடக்கிய கேரள மற்றும் தமிழகத்தின் நீலகிரி, உதகை, கொடைக்கானல், ஏற்காடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாறாமலை, பாலமோர், வேளிமலை, ஆறுகாணி, களியல் உள்ளிட்ட இடங்களில் ஜாதிக்காய் பயிராகிறது.
உருண்டையாக பெரிய அளவிலான எலுமிச்சை வடிவில் இருக்கும் ஜாதிக்காய்கள், அதன் தடிமனான மேல் தோடுகள், உள்ளிருக்கும் கொட்டை, கொட்டையைச் சுற்றி பூ வடிவில் இருக்கும் ஜாதிப்பத்திரி என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. இதில் மேல் தோடுகளுக்கு அதிக விலை கிடைப்பதில்லை, ஜாதிப் பத்திரியும், கொட்டையும் அதிக விலை மதிப்பு கொண்டவை. ஜாதிக்காய் கொட்டை மற்றும் ஜாதிப்பத்திரி ஆகியவை பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்டவை.
ஜாதிப்பத்திரியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
* செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது
ஜாதிப்பத்திரி செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வாயு தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது. குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
* ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது. தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் ஆபத்தான நோய்கள் மற்றும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
* மன அழுத்தத்தைக் குறைக்கிறது
இது மன அழுத்தத்தைக் குறைக்க பயன்படுகிறது. பதற்றத்தைக் குறைத்து, அமைதியாக உணர வைக்கிறது. மேலும், மன சோர்வையும் போக்குகிறது. அதுமட்டுமின்றி, நினைவாற்றலையும் பெருக்குகிறது.
* சிறுநீரகங்களைப் பாதுகாக்கிறது
ஜாதிப்பத்திரியில் சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் திறன் உள்ளது. சிறுநீரக கற்கள் உருவாகுவதைத் தடுக்க உதவுகிறது. சிறுநீரக நோய்த் தொற்றுகள் மற்றும் சிறுநீரகத்துடன் தொடர்புடைய பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
* சளி மற்றும் இருமலை குணப்படுத்துகிறது
இது சளி மற்றும் இருமலை குணப்படுத்துகிறது. இது காய்ச்சல் மற்றும் வைரஸ் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், இது இருமல் சிரப் தயாரித்தலில் பயன்படுகிறது. ஜாதிப்பத்திரி ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த மருந்தாகும்.
ஜாதிப்பத்திரியில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையை மேற்கொண்டு, ஜாதிப்பத்திரியை பயன்படுத்துவது சிறந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!

கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!
எல் நினோ நிகழ்வால் வெப்ப அலை: பயிா்களைப் பாதுகாக்க அறிவுரை
வலிமையும் போர்க்குணமும் நமக்கே உரியதாகும்: கூட்டணிக் கட்சிகளுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
