தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

பளபளக்கும் சருமத்திற்கு பப்பாளி! என்ன செய்ய வேண்டும்?

பப்பாளி சுவையான பழம் என்பத்தைத் தாண்டி அதில் நிறைய சத்துகள் உள்ளன. பப்பாளியில் கரோட்டின் சத்து அதிகம் இருக்கிறது.

News image
Updated On :12 ஜனவரி 2023, 6:01 pm IST

பப்பாளி சுவையான பழம் என்பத்தைத் தாண்டி அதில் நிறைய சத்துகள் உள்ளன.  பப்பாளியில் கரோட்டின் சத்து அதிகம் இருக்கிறது. தவிர வைட்டமின் ஏ, சி, கால்சியம், பொட்டாசியம் சத்துகள் உள்ளன. 

♦ மாதவிடாய் பிரச்னை, வயிற்றுப் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். 

♦ சிறுநீர்ப்பையில் ஏற்படும் கல்லை கரைக்கும் தன்மை பப்பாளிக்கு உண்டு. 

♦ எலும்பு வளர்ச்சி, நரம்பு பலப்படுதல், பல் உறுதி ஆகியவற்றுக்கு உதவும். 

♦மேலும் மலச்சிக்கலை நீக்கும், செரிமானத்திற்கும் உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

Story image

இதையும் படிக்க | ஹெட்ஃபோன் போடாதீங்க..!!

இவ்வாறு உடலுக்குத் தேவையான பல்வேறு நன்மைகளுடன் சரும ஆரோக்கியத்திற்கும் பப்பாளி பெரிதும் பயன்படுகிறது. 

♦ பப்பாளி சாப்பிட்டால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். இறந்த செல்கள் நீங்கிய பிறகு சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 

♦ கரும்புள்ளிகளை அகற்றுதல், சருமத்தில் தொற்று, சிவப்பாக இருத்தல் உள்ளிட்டவை சரியாகும். 

♦ சருமம் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்கும். 

♦ தோல் பிரச்னைகளுக்கு காரணமான சருமம் சேதமடைவதைத் தடுக்கும், சேதமடைந்த சருமத்தை சரிசெய்யும். 

♦ பப்பாளியில் லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட், சரும சுருக்கங்களைக் குறைத்து முதுமையைத் தடுக்கிறது. 

♦ சருமத்தை மென்மையாக்கவும், நீரேற்றம் செய்யவும் மிகச்சிறந்த பொருள் பப்பாளி. 

♦ பப்பாளி சாப்பிடுவதுடன் சருமப் பிரச்னை உள்ளவர்கள் பப்பாளி சாற்றை முகத்தில் தொடர்ந்து அப்ளை செய்துவர விரைவில் மாற்றம் தெரியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.