கண்ணும் கருத்துமாக உடலைப் பாதுகாத்து வந்தாலும் அவ்வப்போது வரும் உடல் தொந்தரவுகள் நம்மை சுணக்கமடையச் செய்கின்றன. ஏன், நமக்குத் தெரியாமலே சில தவறான பழக்கவழக்கங்களை பல நாள்களாக, பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வரலாம்.
சத்தான உணவுகளைச் சாப்பிட்டு போதுமான உடற்பயிற்சி செய்து வந்தாலும் இந்த சில தவறான பழக்கவழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தின் சமநிலையை சிதைக்கின்றன. மேலும் இது மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
உதாரணமாக பசிப்பதை காரணமாக வைத்து நடு இரவில் நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது, சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றைக் கூறலாம். வழக்கத்திற்கு மாறாக, ஒரு செயலைச் செய்யும்போது அது உடலில் சீராக இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்பில் இடையூறை ஏற்படுத்தும். இதனால் உடலில் சில பிரச்னைகள் தோன்றலாம்.
அவ்வாறு பொதுவாக பலரும் செய்யக்கூடிய உங்களுக்கே தெரியாத தவறான பழக்கவழக்கங்கள் என்னென்ன..பார்க்கலாம்...
பசியில்லாமல் சாப்பிடுவது
தினமும் ஒரே நேரத்தில் அதாவது சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வது அத்தியாவசியமானது. அதேநேரத்தில் சாப்பிடும்போது பசி இருக்க வேண்டும். முந்தைய சாப்பிட்ட உணவு அதிகமாக இருந்தாலோ அல்லது செரிமானப் பிரச்னை இருந்தாலோ அடுத்த நேரத்திற்கு சரியாக பசிக்காது. அவ்வாறு இருந்தால் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. நன்றாக பசி எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
தாமதமாக தூங்குவது
ஒவ்வொரு நாளும் இரவு ஒரே நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். இது உங்கள் உடல்நிலையை சீராக்கும். மாறாக, இரவு தாமதமாகத் தூங்குவது, குறிப்பாக தூங்கும்போது மொபைல் போன் பார்ப்பது ஆகியவை செரிமானமின்மை, தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகளைத் தோற்றுவிக்கின்றன. இரவு சீக்கிரமாக தூங்கி காலையில் சீக்கிரம் எழுவதே உடல்நலத்திற்கு நல்லது.
இதையும் படிக்க | டேட்டிங்கில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?
தாமதமாக சாப்பிடுவது
இரவு 9, 10 மணிக்கு மேல் சாப்பிடுவது உடல்நலத்திற்கு சற்றும் நல்லதல்ல என்பதை நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது உடலின் மெட்டபாலிசத்தை சீர்குலைக்கிறது. மேலும் நீரிழிவு நோய் மற்றும் அதன் தொடர்ச்சியான நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.
இரவு 7-7.30க்குள் சாப்பிட்டுவிட்டு 10 மணிக்கு உறங்கி காலை 5-6 மணிக்குள் எழுந்திருக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஒரே நேரத்தில் பல வேலைகள்
ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது நேரத்தை மிச்சமாக்கும் என்றாலும் மனநலம் கருதி அதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அந்த நேரத்தில் மன அழுத்தம் அதிகமாகலாம் என்றும் எச்சரிக்கின்றனர். ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது மன அழுத்தத்திற்குக் காரணமான கார்டிசோல் எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகப்படுத்தும் என்கின்றனர்.
அதிக உடற்பயிற்சி
அதிக உடற்பயிற்சியும் ஆபத்துதான். உடல் எடையை நிர்வகிக்க உடல், மன ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். அதன்படி சிலர் நேரம் கிடைக்கும்போது அதீத உடற்பயிற்சியை செய்வார்கள். சிலர் நன்றாக சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்வார்கள். அதுவும் தவறு. அதிக உடற்பயிற்சி காய்ச்சல், இருமல், வாந்தி, இரத்தம் உறைதல்/வடிதல் உள்ளிட்ட பிரச்னைகளைத் தோற்றுவிக்கும்.
மேற்குறிப்பிட்ட இந்த பழக்கங்களை தொடர்ந்து செய்யும்போது அது சார்ந்த நோய்கள் விரைவில் தாக்கிவிடும். எனவே, உடல் சமநிலையை கெடுக்கக்கூடிய விஷயங்களை முடிந்தவரை தவிர்த்துவிடுவது நல்லது.
இதையும் படிக்க | கவனம்! புற்றுநோயை ஏற்படுத்தும் சமையலறைப் பொருள்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் எவ்வளவு நேரம் பேசினார்?
பேரவையில் முதல்வர் விஜய் பதிலரை! இன்றைய செய்திகள் ஜூன் 23 - நேரலை!

பள்ளிகளில் விஜய் பாடல்களைப் பாடிய மாணவர்கள்! நெட்டிசன்கள் வருத்தம்!

முதல்வர் விஜய் பிறந்த நாள்... த்ரிஷா ஏன் வாழ்த்தவில்லை?
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



