மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அழைப்புகளுக்கு உங்கள் குரலில் பதிலளிக்கும் ஏஐ: ட்ரூகாலரின் புதிய வசதி!

ட்ரூகாலரில் மைக்ரோசாஃப்ட் ஏஐ: உங்கள் குரலில் அழைப்புகளுக்கு பதிலளிக்கிறது!

News image
Updated On :22 மே 2024, 2:02 pm

அலைபேசியில் வரும் அழைப்புகளுக்கு நம் குரலில் ஏஐ பதிலளித்தால் எப்படி இருக்கும்?

இதனை சாத்தியப்படுத்தியுள்ளது ட்ரூகாலர் செயலி. மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து தனிநபர் குரல் தொழில்நுட்பத்தை தனது செயலியில் பயன்படுத்தியுள்ளது.

மைக்ரோசாஃப்ட்டின் அசூர் ஏஐ ஸ்பீச், பயனர்களின் குரல்களை எண்மயாக்கி (டிஜிட்டல் வெர்சன்) ஏஐ உதவியாளருக்கு அளிக்கும்.

2022 முதல் ட்ரூகாலரில் பல்வேறு வகையிலான ஏஐ வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அழைப்புகளை எடுக்கும், குறுஞ்செய்திகளுக்கு தானாகவே பதிலளிக்கும், அழைப்புகளை பதிவு செய்யும் இப்படியான வசதிகளின் வரிசையில் இந்த புதிய வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது குறித்து, “நமக்கு வரும் அழைப்புகளுக்கு நம் குரலிலேயே செய்யறிவு (ஏஐ அசிஸ்டெண்ட்) உதவியாளர் பதிலளிக்கும்” என ட்ரூகாலரின் தயாரிப்பு இயக்குநரும் பொது மேலாளருமான ரபேல் மிமோன் தெரிவித்துள்ளார்.

அழைக்கும் நபர்களுக்கு குரல் பரீட்சயத்தை மட்டுமில்லாமல் செய்யறிவின் திறனையும் இந்த வசதி காண்பிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

மைக்ரோசாஃப்ட் தனிநபர் குரல் செயலி தொழில்நுட்பம், நாம் ட்ரூகாலர் செயலியை வைத்திருந்தால், நமக்கு வரும் அழைப்புக்கு நம் குரலிலேயே ஏஐ பதிலளிக்கும் வசதியை கொடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வசதி படிப்படியாக உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.