நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அழைப்புகளுக்கு உங்கள் குரலில் பதிலளிக்கும் ஏஐ: ட்ரூகாலரின் புதிய வசதி!

ட்ரூகாலரில் மைக்ரோசாஃப்ட் ஏஐ: உங்கள் குரலில் அழைப்புகளுக்கு பதிலளிக்கிறது!

News image
Updated On :22 மே 2024, 7:32 pm IST

அலைபேசியில் வரும் அழைப்புகளுக்கு நம் குரலில் ஏஐ பதிலளித்தால் எப்படி இருக்கும்?

இதனை சாத்தியப்படுத்தியுள்ளது ட்ரூகாலர் செயலி. மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து தனிநபர் குரல் தொழில்நுட்பத்தை தனது செயலியில் பயன்படுத்தியுள்ளது.

மைக்ரோசாஃப்ட்டின் அசூர் ஏஐ ஸ்பீச், பயனர்களின் குரல்களை எண்மயாக்கி (டிஜிட்டல் வெர்சன்) ஏஐ உதவியாளருக்கு அளிக்கும்.

2022 முதல் ட்ரூகாலரில் பல்வேறு வகையிலான ஏஐ வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அழைப்புகளை எடுக்கும், குறுஞ்செய்திகளுக்கு தானாகவே பதிலளிக்கும், அழைப்புகளை பதிவு செய்யும் இப்படியான வசதிகளின் வரிசையில் இந்த புதிய வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது குறித்து, “நமக்கு வரும் அழைப்புகளுக்கு நம் குரலிலேயே செய்யறிவு (ஏஐ அசிஸ்டெண்ட்) உதவியாளர் பதிலளிக்கும்” என ட்ரூகாலரின் தயாரிப்பு இயக்குநரும் பொது மேலாளருமான ரபேல் மிமோன் தெரிவித்துள்ளார்.

அழைக்கும் நபர்களுக்கு குரல் பரீட்சயத்தை மட்டுமில்லாமல் செய்யறிவின் திறனையும் இந்த வசதி காண்பிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

மைக்ரோசாஃப்ட் தனிநபர் குரல் செயலி தொழில்நுட்பம், நாம் ட்ரூகாலர் செயலியை வைத்திருந்தால், நமக்கு வரும் அழைப்புக்கு நம் குரலிலேயே ஏஐ பதிலளிக்கும் வசதியை கொடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வசதி படிப்படியாக உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.