லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கவிஞர் கலாப்ரியாவுக்கு ‘மனோன்மணியம் சுந்தரனார் விருது’!

இன்று நெல்லை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விருதும், ரூபாய் 1 லட்சம் ரொக்கப்பணமும், பட்டயச்சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2018, 6:52 am

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகம், கவிஞர் கலாப்ரியாவுக்கு இந்த ஆண்டுக்கான ‘மனோன்மணியம் சுந்தரனார் விருது’ அளித்துக் கெளரவித்துள்ளது. கலை, பண்பாடு, இலக்கியம், மொழி ஆகியவற்றில் சிறந்து விளங்கக்கூடிய இலக்கிய ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து 2014 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. முதல்முறையாக 2014 ஆம் ஆண்டில் பேராசிரியர் இளையபெருமாள் மற்றும் சீனி விஸ்வநாதனுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. 2015 ல் தமிழறிஞர் ச.வே. சுப்ரமணியனுக்கும் 2016 ல் கரிசக்காட்டு எழுத்தாளுமை கி.ராஜநாராயணனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இந்த ஆண்டு இவ்விருது கவிஞர் கலாப்ரியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். நெல்லை, கடையநல்லூரில் பிறந்த கலாப்ரியா தற்போது இடைக்காலில் வசிக்கிறார். இவரது மனைவி கணித ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கலாப்ரியா, வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் இதுவரை தமிழக அரசின் கலைமாமணி விருது, ஜெயகாந்தன் விருது, கண்ணதாசன் விருது, திருப்பூர் தமிழ்சங்க விருது, கருணாநிதி பொற்கிழி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். கடந்த புத்தகத் திருவிழாவில் இவர் எழுதிய வேனல் நாவல் பெருவாரியான புத்தக ப்ரியர்களால் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லப்பட்டது. இன்று நெல்லை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விருதும், ரூபாய் 1 லட்சம் ரொக்கப்பணமும், பட்டயச்சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது.

Related Article

கர்னாடக சங்கீதம் இந்துக் கடவுள்களுக்கு மட்டுமில்லை இனிமேல் இயேசு, அல்லாவுக்கும் உண்டு: பாடகர் டி எம் கிருஷ்ணா!

‘மதுவந்தி’ என்றொரு ராகமிருக்கிறது தெரியுமா?

பள்ளிகளில் தோல்பாவைக் கூத்து வகுப்புகள் நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு!

உங்களுக்கு கதகளி பயிற்சி பெற ஆர்வம் உள்ளதா? இதைப் படியுங்கள் முதலில்!

குழலிசை இன்றும் இருக்கையில், யாழிசை ஏன் இல்லாமலானது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.