பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் சும்மா விட்டுவிடுவார்களா? சபாஷ் சரியான தண்டனை!

கலைப்பொக்கிஷங்களை பொதுமக்களும், பார்வையாளர்களும் பேணிப் பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அவற்றுக்கு சேதம் விளைவிக்காமலாவது இருக்க வேண்டும். விளையாட்டு என்ற பெயரில் இப்படிப்பட்ட வினைகளைத்
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் சும்மா விட்டுவிடுவார்களா? சபாஷ் சரியான தண்டனை!
Published on
Updated on
2 min read

ஃபிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நான்கு இளைஞர்கள் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஹம்பிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள். ஹம்பி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்று. விஜயநகர சாம்ராஜயத்தை உருவாக்கியவர்களுள் மூலவர்களான ஹரிஹரர் மற்றும் புக்கர் காலத்தில் பிரிசித்தி பெற்ற நகரங்களில் ஒன்றாக ஹம்பி விளங்கியதற்கான சரித்திரக் குறிப்புகள் உண்டு. இங்கிருக்கும் விருபாஷர் ஆலயம் இந்திய கோயில் கட்டடக் கலைக்கு மிகப்பெரிய சான்று. இங்கு இப்போதும் புராதனத்தின் மிச்சங்களாக பிரும்மாண்டமான கற்கோயில்களும், சிற்பங்களும், கடவுள் ரூபங்களும் உண்டு. அவற்றில் ஒன்றில் மேற்கண்ட நான்கு இளைஞர்களும் தங்களது பலத்தைப் பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்கள். 

ஹம்பியில் இருக்கும் கற்தூண்களில் சிலவற்றைக் வெறும் கையால் பலம் கொண்ட மட்டும் தாக்கி கீழே விழ வைக்கச் செய்யலாம் என விளையாட்டுத் தனமாக முயன்று பார்த்திருக்கிறார்கள். விபரீதமான இந்த விளையாட்டில் இரண்டு தூண்கள் நிஜமாகவே கீழே விழுந்து வைக்க அதை விடியோ பதிவு செய்து அவரவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருக்கிறார்கள். இவ்விஷயம் உடனடியாக அங்கிருக்கும் தொல்லியல் துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

கலைப்பொக்கிஷங்களை பொதுமக்களும், பார்வையாளர்களும் பேணிப் பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அவற்றுக்கு சேதம் விளைவிக்காமலாவது இருக்க வேண்டும். விளையாட்டு என்ற பெயரில் இப்படிப்பட்ட வினைகளைத் தேடிக் கொண்டால் அதை மன்னிக்க வேண்டும் என்று என்ன நிர்பந்தமிருக்கிறது. எனவே தொல்லியல் துறை சார்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் திரும்புவதற்குள் வெவ்வேறு மாநிலங்களைச் சார்ந்த அந்த நான்கு இளைஞர்களும்  கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்ற விசாரணையில் நாட்டின் கலைப்பொக்கிஷங்களான சிற்பங்களுக்கு ஊறு விளைவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு நிரூபணம் ஆன காரணத்தால் அவர்கள் நால்வருக்கும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது செய்த குற்றத்திற்கு தண்டனையாக தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் அபராதத் தொகையை செலுத்தினால் அவர்களுக்கான சிறைத்தண்டனையில் இருந்து தப்பலா, ஆயினும் கீழே விழுந்து சேதமடைந்த அந்த புராதனத் தூண்களை மீண்டும் பழையபடி நிர்மாணிக்க வேண்டியதும் அவர்களது பொறுப்பே என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் மீண்டும் இது போன்றதொரு விளையாட்டுத் தனமான விபரீதக் குற்றத்தில் ஈடுபடமாட்டோம் என்று ஒப்புதல் உறுதிமொழிக் கடிதமும் எழுதிக் கையெழுத்திட்டுத் தர வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இப்படியொரு விபரீதவழக்கில் சிக்கிய அந்த இளைஞர்கள் நால்வருமே தற்போது கர்நாடக கொசபேட் நீதிமன்றத்தில் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டதுடன் கீழே விழுந்து விட்ட தூண்களை தொல்லியல் துறை அதிகாரிகள் முன்னிலையில் எழுப்பி நிறக வைத்து விட்டு தங்களது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டிருக்கிறார்கள். ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்ற கேள்விக்கு அவர்களிடமிருந்து வந்த பதில், ‘நாங்கள் விளையாட்டாகச் செய்தோம், இந்த இடத்தின் சரித்திர முக்கியத்துவம் குறித்தெல்லாம் எங்களுக்குத் தெரியாது. விளையாட்டு விபரீதமாக விட்டது என்று தெரிவித்திருக்கிஏறார்கள்.

Video Courtesy: The News Minute

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com