25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

இனி வாட் ஆப்ஸ் அரட்டைக்கு மட்டுமல்ல, புக்கிங் செய்யவும் பயன்படும்!

இனி வெறும் தகவல் பறிமாற்ற செயலியாக நீங்கள் வாட்ஸ்ஆப்பை நினைக்க முடியாது.

Published On :7 பிப்ரவரி 2024, 3:32 pm IST

இனி வெறும் தகவல் பறிமாற்ற செயலியாக நீங்கள் வாட்ஸ்ஆப்பை நினைக்க முடியாது. தற்போது வெவ்வேறு புதிய சேவைகளை அதில் இணைக்கப் படவிருக்கிறது.  கார் முன்பதிவு, பஸ், ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகள், ஹோட்டல், என பலவிதமான தேவைக்கு ஏற்றவாறு அப்டேட் ஆகவுள்ளது வாட்ஸ் ஆப்.

வாட்ஸ் ஆப்பில் புத்தம்புதியதாக பல்வேறு சேவைகளை உள்ளடக்கி நவீனமாக இச்செயலியை மாற்றிவிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.  சினிமா டிக்கெட்டிலிருந்து ப்ளைட் டிக்கெட்டுகள் வரை இனி இதில் முன்பதிவு செய்யலாம். கேப் புக் செய்யவும், வெளியூர்களில் ஹோட்டலில் தங்குவதற்கு முன்பதிவு செய்யவும் இணையதளங்களை தேடி செல்லத் வேண்டியதில்லை. இனி 'வாட்ஸ் ஆப்பின் மூலமாகவே இந்தச் சேவைகளை பெற முடியும்.

இதில் முதல் கட்ட வேலையாக திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய 'புக் மை ஷோ' நிறுவனத்துடன் வாட்ஸ் ஆப் நிறுவனம் இணைந்துள்ளது. 'புக் மை ஷோ'வில் டிக்கெட் பதிவு செய்தால் 'வாட்ஸ் ஆப்'-இல் டிக்கெட் முன்பதிவு செய்ததற்கான உறுதித் தகவல் அனுப்படும். போலவே ஓலா, ஒயோ, போன்ற பிற சேவை நிறுவனங்களும் இணைய உள்ளது. இவை தவிர பண பறிமாற்ற வசதிகளையும் 'வாட்ஸ் ஆப்' செயலியின் மூலம் நிகழ்த்தலாம். 

நவீன வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்ட வாட்ஸ் ஆப்பில் வாழ்பவர்களுக்கு இனி துளியும் கவலையில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.