எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துவிட்டீர்களா? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், தயவு செய்து, உணவை தவிர்ப்பதை மட்டும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள் என்கிறது ஆய்வு.

News image

உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துவிட்டீர்களா? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க (கோப்புப்படம்)

Updated On :6 பிப்ரவரி 2024, 6:14 pm IST


மும்பை: உடல் எடையைக் குறைக்கும் திட்டத்தில், உணவுகளை தவறவிடும் முடிவு நிச்சயம் நல்லதாக இருக்காது என்று கூறப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், தயவு செய்து, உணவை தவிர்ப்பதை மட்டும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள் என்கிறது ஆய்வு.

இந்த தவறாக அணுகுமுறை, உங்களது வளர்ச்சிதை மாற்றத்தையே சத்தமில்லாமல், குறைத்துவிடும், இதனால், உடல் எடை அசுர வேகத்தில் அதிகரிக்கும் அபாயமிருப்பதாக டாக்டர் ஸ்நேஹல் அதுஸ்லே தெரிவித்துள்ளார்.

உடல் எடைக் குறைப்புக்கு பயிற்சி மற்றும் சத்துணவு வடிவமைப்பாளராக செயல்பட்டு, ஏராளமான பெண்களின் உடல் எடையைக் குறைத்து அவர்கள் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, வாழ்வில் பல வெற்றிகளைப் பெற்ற சாதனையாளர்களாக மாற உதவியர் ஸ்நேஹல் அதுஸ்லே.

அவர் சொல்லும் ஒரு விந்தையான விஷயம் என்ன தெரியுமா? முதலில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற பயணத்தில், சரியாக சமவிகித உணவை, சரியான நேரத்தில உண்ண வேண்டும் என்பதுதான் என்கிறார்.

இவர் உடல் எடைக் குறைப்பு குறித்து கூறுகையில், தயவுகூர்ந்து, உணவு இடைவேளையை அதிகரித்துவிடாதீர்கள். அது வளர்ச்சிதைமாற்றத்தில் எதிர்மறை வினையாற்றத் தொடங்கிவிடும். அதில் மிக முக்கியமானது என்ன தெரியுமா? காலையில் எழுந்ததும், 45 நிமிடத்துக்குள் இரவு விரதத்தை முடித்துவிட வேண்டும் என்பதுதான்.

பலரும், காலை உணவைத் தவிர்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காலை உணவை தவிர்ப்பவர்கள், நாள்தோறும் அவர்கள் சராசரியாக உண்ணும் உணவைக் காட்டிலும் 500 கலோரிகள் அதிகமாக சாப்பிடுவார்கள். இதுதான், அவர்களது உடல் எடைக் குறைப்புத் திட்டத்துக்கு எதிர்மறையாகச் செயல்படும். வழக்கமாக, காலை 7 மணி முதல் 8 மணிக்குள் காலை உணவை சாப்பிட்டுவிட வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், காலை 10 மணிக்கு மேல் தாண்டவேக் கூடாது என்கிறார் கண்டிப்புடன்.

அதுபோலவே, மதிய உணவை 12.30 மணியிலிருந்து 2.30 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும்.  அது மட்டுமல்ல, மதிய உணவு சாப்பிட்டு 3 அல்லது 4 மணி நேரத்துக்குள் இரவு உணவை சாப்பிட வேண்டும். அப்போதுதான். இரவு உணவு சாப்பிட்டு 3 மணி நேரம் கழித்து உறங்கச் செல்ல சரியாக இருக்கும். இரவு உணவு சாப்பிடுவது 10 மணிக்கு மேல் தாண்டக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.