ஐபிஎல் கிரிக்கெட்டுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் சனிக்கிழமை தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் சார்பில் ஏலம் எடுக்கப்படுவதற்காக 600 வீரர்கள் தொகுப்பிலிருந்து 220-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம்பெற்றனர்.
இரண்டாம் நாள் ஏலத்தின் செய்திகளை இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
மேற்கிந்தியத் தீவுகள் ஆல்-ரௌண்டர் ஓடீன் ஸ்மித்தை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 6 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால், இவருக்கு நிறைய போட்டி நிலவியது.
Mr. Hugh Edmeades - the IPL Auctioneer - is fine now and has a message for all. #TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/U7uzt6PIMw
— IndianPremierLeague (@IPL) February 13, 2022
இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் லியாம் லிவிங்ஸ்டனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 11.50 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.
இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனைத் தேர்வு செய்ய ரூ. 11 கோடியைத் தாண்டி பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே போட்டி..
இந்தியா வீரர்கள் சௌரப் திவாரி, சேத்தேஷ்வர் புஜாரா ஆகியோரை யாரும் தேர்வு செய்யவில்லை. இதேபோல ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன், ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்தின் டேவிட் மலான், இயான் மார்கன் ஆகியோரையும் யாரும் தேர்வு செய்யவில்லை.
அஜின்க்யா ரஹானேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எய்டன் மார்க்கிரமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 2.6 கோடிக்கு எடுத்துள்ளது.
ஐபிஎல் ஏல நடத்துநர் எட்மியட்ஸ், தான் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், இரண்டாம் நாள் ஏலத்தையும் சாரு சர்மாவே நடத்துகிறார்.
சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.
நியூசிலாந்து வீரர் டிம் சௌதி 1.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது கொல்கத்தா அணி.
இலங்கை வீரர் பானுகா ராஜபக்சவை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பஞ்சாப் அணி.
தமிழக வீரர் என். ஜெகதீசனை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது சென்னை அணி.
#SuperKingForever @faf1307 pic.twitter.com/rt3MUcOD4o
— Chennai Super Kings - Mask Pdu Whistle Pdu! (@ChennaiIPL) February 13, 2022
ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலம் உணவு இடைவேளை: 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏலம் தொடங்கும்.
மயங்க் மார்கண்டே ராஜஸ்தான் ராயல்ஸிலிருந்து மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்பியுள்ளார். அவர் ரூ. 65 லட்சத்துக்கு எடுக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் இளம் சுழற்பந்துவீச்சாளர் மகேஷ் தீக்ஷனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 70 லட்சத்துக்கு எடுத்துள்ளது.
கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸுக்காக விளையாடிய சேத்தன் சகாரியா இந்த முறை ரூ. 4.20 கோடிக்கு தில்லி கேபிடல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சேத்தன் சகாரியாவைத் தேர்வு செய்ய ராஜஸ்தான் ராயல்ஸ், தில்லி கேபிடல்ஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரூ. 4 கோடியைத் தாண்டி ஏலம்
லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி இலங்கை வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீராவை ரூ. 2 கோடிக்கு எடுத்துள்ளது.
தில்லி கேபிடல்ஸ் அணி ரூ. 5.25 கோடிக்கு வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதைத் தேர்வு செய்துள்ளது.