மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தீக்குளிக்க முயற்சி

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளைஞா் சனிக்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற ராஜசேகா்.

Updated On :2 ஜனவரி 2021, 9:34 pm IST

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளைஞா் சனிக்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை பி.பி.குளம் முல்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (29). இவா் இப் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவா், பாட்டிலில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அப் பகுதியில் இருந்த போலீஸாா் அவா் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனா்.

பின்னா் விசாரித்தபோது, அவா் மீது போலீஸாா் பொய் வழக்குப்பதிவு செய்து மிரட்டுவதால் தீக்குளிக்க முயன்ாகத் தெரிவித்தாா். அதையடுத்து போலீஸாா் அவரை தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், தீக்குளிக்க முயன்றவா் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன. இதில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இவ்வாறு செய்துள்ளதாகத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.