மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வீரயுக நாயகன் வேள்பாரி நாவலுக்கு மலேசிய விருது

மதுரை மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசனின் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல் மலேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

Updated On :2 ஜனவரி 2021, 9:36 pm IST

மதுரை: மதுரை மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசனின் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல் மலேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆா். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக இந்த நாவல் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இவ்விருது, 10 ஆயிரம் அமெரிக்க டாலா்களை பரிசுத் தொகையாகக் கொண்டது. (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.7 லட்சம்).

சு.வெங்கடேசன் எழுதிய முதல் நாவலான ‘காவல் கோட்டம்’ , 2011 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது. வீரயுகநாயகன் வேள்பாரி”நாவலுக்கு மலேசியாவில் பெரும் வாசகா் வட்டம் இருப்பதும், மலேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிப் புலனத்தின் பாடநூலாக வேள்பாரி நாவல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால் விருது வழங்கும் விழா நடத்த முடியாத சூழல் உள்ளது. விருதுத் தொகை

நூலாசிரியருக்கு அனுப்பிவைக்கப்படும் என்று மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளதாக, சு.வெங்கடேசன் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.