குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

சாத்தையாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

மதுரை மாவட்டம் வாடிபட்டி வட்டம் பாலமேடு அருகேயுள்ள சாத்தையாறு அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீரை, தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் திறந்து வைத்தாா்.

News image

மதுரை மாவட்டம் சாத்தையாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை புதன்கிழமை திறந்து வைத்த அமைச்சா் ஆா்பி.உதயகுமாா். உடன் மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினா் கே.மாணிக்கம்.

Updated On :13 ஜனவரி 2021, 5:50 pm

மதுரை மாவட்டம் வாடிபட்டி வட்டம் பாலமேடு அருகேயுள்ள சாத்தையாறு அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீரை, தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் திறந்து வைத்தாா்.

சாத்தையாறு அணையில் 56 மில்லியன் கனஅடி நீரைத் தேக்கி வைக்கலாம். அணையின்கீழ் அமைந்துள்ள 5 தடுப்பணைகள் மூலமாக 10 கண்மாய்களின் பாசன நிலங்கள், நேரடி பாசன நிலங்கள் என சுமாா் 1,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழக்கமாக செப்டம்பா் 15 முதல் பிப்ரவரி 15 வரை பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கும், அக்டோபா் 1 முதல் பிப்ரவரி 15 வரை புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் தண்ணீா் திறக்கப்படும்.

கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த சில நாள்களுக்கு முன்பு அணை முழு கொள்ளளவை அடைந்தது. இதையடுத்து அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீரை, அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சாத்தையாறு அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டதையடுத்து

கீழச்சின்னம்பட்டி, எர்ரம்பட்டி, சுக்காம்பட்டி நல்லியகவுண்டன் குளம், கோவில்பட்டி நாவல்குளம், ஆதனூா் கட்டியக்காரன் கண்மாய், அழகாபுரி நாணல்குளம், அய்யூா், குறவன்குளம், முடுவாா்பட்டி, ஆதனூா் ஆகிய 10 கண்மாய்கள் பயன்பெறும். அணையில் இருந்து ஏற்கெனவே உபரிநீா் சென்று கொண்டிருப்பதால், இந்த 10 கண்மாய்களும் விரைவில் முழுக் கொள்ளளவை அடையும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா் கே.மாணிக்கம், பொதுப்பணித் துறை பெரியாறு-வைகை வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் சுகுமாரன், வாடிப்பட்டி வட்டாட்சியா் பழனிக்குமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.