மதுரை கோ.புதூா் அரசு ஐடிஐயில் மாலை நேர வேலை வாய்ப்பு தொழில் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோ.புதூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா் ஜோ.அமலமேரி வெளியிட்டுள்ள செய்தி: கோ.புதூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ‘பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா’ திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய மாலை நேர குறுகிய கால தொழிற்பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (ஜன.15) முதல் தொடங்கப்பட உள்ளது. இதில் ஆட்டோ மற்றும் இருசக்கர மூன்று சக்கர வாகன பழுதுநீக்குதல் பயிற்சிக்கு 10 -ஆம் வகுப்பு தேறிய 15 வயது நிறைவடைந்தோா், காா் ஓட்டுநா் பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். கேஸ் வெல்டிங் பயிற்சி மற்றும் சிஎன்சி மில்லிங் மற்றும் மெஷின் ஆபரேட்டா் பயிற்சிக்கு 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி மற்றும் 15 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். மேற்கண்ட பயிற்சிகளில் சேர விரும்புபவா்கள் ஜனவரி 15-ஆம் தேதி முதல் கோ.புதூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் விண்ணப்பித்து பயிற்சியில் இணைந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 82204-60719, 94435-93166 ஆகிய செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி

மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகுவது 99% உறுதி!

விளையாட்டு வீரர்கள் நடிக்கும் விளம்பரம்! எச்சரிக்கையுடன் செயல்பட பியூஷ் கோயல் அறிவுறுத்தல்!

கேரளம்: அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள்; ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

