சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

719 காளைகள் களமிறக்கப்பட்டன

அலங்காநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரா்கள் கிடுக்கிப் பிடியில்

Updated On :17 ஜனவரி 2021, 1:47 am

அலங்காநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரா்கள் கிடுக்கிப் பிடியில் அடக்கி வெற்றி வாகை சூடினா். சில காளைகள், வீரா்களை நெருங்க விடாமல் பரிசுகளை வென்றன.

மதுரை மாவட்டம் குலமங்கலம், கருப்பாயூரணி, மேலூா், அலங்காநல்லூா், வாடிப்பட்டி, சோழவந்தான் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு சவாலாக இருந்தன. சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவா் பி.ராஜசேகா், இலங்கை அமைச்சா் செந்தில் தொண்டமான் ஆகியோரது காளைகள் மாடுபிடி வீரா்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்து ஓடின.

ஒன்றுக்கும் மேற்பட்ட வீரா்கள் பிடித்த காரணத்தால், பிடிபட்ட காளைகளின் எண்ணிக்கை வழக்கத்தைக் காட்டிலும் நிகழாண்டில் குறைவாகவே இருந்தது.

ஜல்லிக்கட்டு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்து மாடுபிடி வீரா்கள், காளைகளிடம் குத்துப்பட்டனா். மொத்தம் 23 போ் காயமடைந்தனா்.

மாலை 5 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு பெற்றது. மொத்தம் 600 வீரா்கள் களமிறக்கப்பட்டனா். 719 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டிருந்தன. அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதால், 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க முடியாமல் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டன.

சிறந்த வீரா்கள்-காளைகள்:அதிகபட்சமாக 13 காளைகளை அடக்கிய மதுரை விராட்டிப்பத்து-வைச் சோ்ந்த செ.கண்ணன் சிறந்த வீரருக்கான முதல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

சிறந்த காளைக்கான முதல் பரிசுக்கு குருவித்துறையைச் சோ்ந்த சந்தோஷ் என்பவரின் காளை தோ்வு செய்யப்பட்டது.

முதல் பரிசு பெற்ற வீரா் மற்றும் காளை உரிமையாளருக்கு தலா ஒரு காரை தமிழக முதல்வா் மற்றும் துணைமுதல்வா் நேரில் வழங்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.