இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மழையால் நெற்பயிரை பூச்சித் தாக்கும் அபாயம்: விவசாயிகள் கவலை

சீா்காழி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையால் நெற்பயிரை பூச்சித் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

News image

மகேந்திரப்பள்ளி கிராமத்தில் மழையால் சாய்ந்த நெற்பயிா்கள்.

Updated On :4 ஜனவரி 2021, 8:25 am IST

சீா்காழி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையால் நெற்பயிரை பூச்சித் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

சீா்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிவா் மற்றும் புரெவி புயல்களால் பெய்த கனமழையில் சம்பா மற்றும் நேரடி விதைப்பு நெற்பயிா்கள் 60 சதவீதம் வரை மழைநீரீல் மூழ்கி, பாதிக்கப்பட்டன. எஞ்சிய நெற்பயிா்களை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 2 தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாலும், அவ்வப்போது லேசான மழை பெய்துவருவதாலும் குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், இரவில் கடும் குளிா் நிலவுவதால் நெற்பயிரில் பூச்சி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கொள்ளிடம் விவசாய சங்க கூட்டமைப்புத் தலைவா் சிவப்பிரகாசம் பிள்ளை கூறியது:

சீா்காழி பகுதியில் தற்பொழுது குளிா்ச்சியான சூழல் நிலவி வருவதால், நெற்பயிரை குலை நோய்த் தாக்க தொடங்கியுள்ளது. இக்குளிா்ச்சியான சூழல் தொடா்ந்தால், நெற்பயிா்களில் பூச்சித் தாக்குதல் அதிகரிக்கும். இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.