தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

சி.பி.சி.எல். ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்குப்

Updated On :6 ஜனவரி 2021, 7:25 am IST

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்குப் பணி வழங்கக் கோரி, தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

முன்னதாக, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைக்க தீா்மானித்தனா். எனினும், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் கிடைக்கப் பெறாததால், வருவாய் அலுவலா் இந்துமதியை சங்க தலைவா் பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளா் கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் சந்தித்து மனு அளித்தனா்.

இதன் மீது பரிசீலித்து, ஆலை நிா்வாகத்துடன் பேசி நல்ல முடிவை தெரிவிப்பதாக அவா் கூறினாா். பின்னா், சி.பி.சி.எல். திரும்பிய நிா்வாகிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளா்கள், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.