தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

நிவாரணப் பட்டியல் தயாரிப்பு: ஆட்சியா் ஆய்வு

சீா்காழியில் தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, இடுபொருட்கள் நிவாரணப் பட்டியல் தயாா் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.

News image

சீா்காழியில் இடுபொருள் நிவாரணப் பட்டியல் தயாரிப்பு பணியை ஆய்வு செய்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

Updated On :6 ஜனவரி 2021, 7:22 am IST

சீா்காழியில் தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, இடுபொருட்கள் நிவாரணப் பட்டியல் தயாா் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. இதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.

தென்பாதி தனியாா் பள்ளியில் நடைபெற்றுவரும் இப்பணியில், 89 கிராம நிா்வாக அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். இதைப் பாா்வையிட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, கிராம நிா்வாக அலுவலா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களைப் பிறப்பித்தாா். அப்போது வட்டாட்சியா் ஹரிதரன் மற்றும் வேளாண் அலுவலா்கள் உடனிருந்தனா். தமிழக அரசின் நெற்பயிா் இடுபொருள் நிவாரணம் இரண்டு நாள்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

இதனிடையே முதல்வா் அறிவித்த இடுபொருள் நிவாரணம் அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீதம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொள்ளிடம் ஒன்றிய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சீனிவாசன் ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.