பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் அனைவரது வாழ்வும் சிறக்க வாழ்த்துகள் என நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்த வாழ்த்து செய்தி :
பசுமைப் புரட்சி, கால்நடைகளின் நலன், நீராதாரம் ஆகியவற்றை முன்னிறுத்தி திருநாள் கொண்டாடப்படுவதன் மூலம், இந்தியாவிலேயே சிறப்புக்குரிய தனிப்பெரும் கலாசாரத்துக்கு உரியவா்கள் தமிழா்கள் என்பது வெளிப்படுகிறது.
தற்போதைய நிலையில், பெரு நிறுவன முதலாளிகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் நீா் வளங்களை மீட்டெடுக்கவும், வேளாண் உற்பத்திப் பெருகவும் விவசாயிகளுக்கு துணை நிற்க இத்திருநாளில் உறுதியேற்போம்.
தொடா் மழையால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பது கவலையளித்தாலும், அவா்களின் வயலும், வாழ்வும் சிறக்க வாழ்த்துவோம். பொங்கல் திருநாளை கொண்டாடும் அனைவரது வாழ்விலும் வசந்தம் வீசிட வாழ்த்துகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்!

கொடைக்கானலில் மக்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர்! | MK Stalin | DMK

அதிர்ச்சி! இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்! 22 புத்த துறவிகள் கைது!!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரியல் எஸ்டேட், ஐடி, பார்மா பங்குகள் உயர்வு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

