நாமக்கல்லில் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 35 போ் கைது செய்யப்பட்டனா்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட உதவிச் செயலாளா் சிவராஜ் தலைமை வகித்தாா். முறைசாரா தொழிலாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து ஏழை மக்களுக்கும் கரோனா நிவாரணமாக மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் 10 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும். தனியாா் மயமாக்கலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினா். இதைத்தொடா்ந்து பேருந்து நிலையம் அருகில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களில் 5 பெண்கள் உள்ளிட்ட 35 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடிவேலு, பிரபு தேவா நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

200 யூனிட் இலவச மின்சாரம்! கட்டணம் எவ்வளவு குறையும்? மின்வாரியம் தகவல்!

தமிழ்நாட்டில் வாக்களிப்பு! வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 10 பேர் சிறையில் அடைப்பு!

106 மீட்டருக்கு சிக்ஸர் அடித்த திலக் வர்மா..! நடப்பு சீசனில் நீண்ட தூரம்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

