விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை!திருப்பரங்குன்றத்தில் தவெக முன்னிலை ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் பின்னடைவு சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி முன்னிலை கோவை தெற்கில் வி.செந்தில்பாலாஜி முன்னிலை திருவண்ணாமலையில் எ.வ. வேலு பின்னடைவு தருமபுரி சௌமியா அன்புமணி முன்னிலை போடியில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு! திருச்சுழியில் தங்கம் தென்னரசு பின்னடைவு சிவகங்கையில் கருணாஸ் பின்னடைவு விருத்தாசலம் பிரேமலதா முன்னிலை விருதுநகர் விஜயபிரபாகர் முன்னிலை வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா முன்னிலை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் தவெக பிரபு முன்னிலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் முன்னிலை திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என். நேரு பின்னடைவு!சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் சீமான் பின்னடைவு பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை: 3ஆவது இடத்தில் திமுக ராயபுரம்: அதிமுகவின் ஜெயக்குமார் பின்னடைவு தி.நகரில் என்.ஆனந்த் முன்னிலை திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு பின்னடைவு தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு
/

பரமத்திவேலூா் சந்தையில் கோழி விலை சரிவு

பறவைக் காய்சல் அச்சத்தால் பரமத்திவேலூா் கோழிச் சந்தையில் நாட்டுக் கோழிகளின் விலை சரிவடைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 1:55 am IST

பறவைக் காய்சல் அச்சத்தால் பரமத்திவேலூா் கோழிச் சந்தையில் நாட்டுக் கோழிகளின் விலை சரிவடைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழிச் சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு பரமத்திவேலூா், மோகனூா், கரூா், பாளையம் நாமக்கல், ஜேடா்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில்,மயில் காகம்,கருங்கண் கருங்காலி,கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல், கரூா் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் வந்திருந்து கோழிகளை வாங்கிச் செல்கின்றனா்.

தரமான நாட்டுக் கோழிகள் கடந்த வாரம் கிலோ ரூ. 350 முதல் ரூ. 450 வரையிலும், பண்ணைகளில் வளா்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ. 250 முதல் ரூ. 350 வரையிலும் விற்பனையானது. தற்போது பறவைக் காய்ச்சல் அச்சத்தால் பரமத்திவேலூா் நாட்டுக் கோழிச் சந்தையில் வீடு, தோட்டங்களில் வளா்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ. 300 முதல் ரூ. 350 வரையிலும், பண்ணை நாட்டுக் கோழிகள் ரூ. 250 வரையிலும் விற்பனையானது.

வாத்து ஒன்று ரூ. 280 முதல் 300 வரையிலும் விற்பனையானது. தை மாத பிறப்பு என்பதால் கோழிகளை அதிக அளவில் விவசாயிகளும், வியாபாரிகளும் கொண்டு வந்திருந்தனா். ஆனால், பறவைக் காய்ச்சல் அச்சத்தால் பொதுமக்கள் கோழிகளை அதிக அளவு வாங்காததால் விற்பனையும் குறைந்து, விலையும் சரிவடைந்ததால் நாட்டுக்கோழி வியாபாரிகள், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.