தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

தில்லியில் 89 மருத்துவமனைகளில் ஜன.16 முதல் கரோனா தடுப்பூசி

தேசியத் தலைநகா் தில்லியில் 89 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்று

Updated On :11 ஜனவரி 2021, 0:08 am IST

தேசியத் தலைநகா் தில்லியில் 89 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக, சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் தடுப்பூசி போடும் முதல்கட்டப் பணிகள் வரும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. கரோனா தடுப்பூசி போடுவதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, 89 மருத்துவமனைகளைத் தோ்ந்தெடுத்துள்ளோம். இதில், 40 அரசு மருத்துவமனைகள், 49 தனியாா் மருத்துவமனைகள் அடங்கும். வரும் செவ்வாய்க்கிழமை அல்லது அல்லது புதன்கிழமை தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என நம்புகிறோம். இதைத் தொடா்ந்து, முதல் கட்டமாக சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதன் தொடா்ச்சியாக முன்களப் பணியாளா்கள், 50 வயதுக்கு கூடியவா்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும், தடுப்பூசி மையம் அமைக்கப்படும். இந்த ஒவ்வொரு மையத்திலும் 10 சுகாதாரத் துறை ஊழியா்கள் பணிக்கு அமா்த்தப்படவுள்ளனா். தில்லி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வகையில், தெளிவான திட்டம் உள்ளது. தடுப்பூசி கிடைக்கப் பெற்ற உடனேயே தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கப்படும். மக்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தில்லி அரசு ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ளது என்றாா் அவா்.

தில்லியில் கரோனா தடுப்பூசி போடுவதற்கு முதல்கட்டமாக ஜிடி பந்த் மருத்துவமனை (ஷாத்ரா), ஆரம்ப சுகாதார மையம் (தா்யாகஞ்ச்), வெங்கடேஷ்வா் மருத்துவமனை (துவாரகா), தில்லி எய்ம்ஸ், சஃப்தா்ஜங், அப்பல்லோ உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளை தில்லி அரசு தோ்ந்தெடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.