ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

முன்விரோதத்தில் கடைக்காரா் சுட்டுக் கொலை ஜாஃப்ராபாதில் 2 சிறுவா்கள் கைது

வடகிழக்கு தில்லியில் உள்ள ஜாஃப்ராபாதில் முன்விரோதத்தில் கடைக்காரா் ஒருவரை கொலை செய்ததாக இரண்டு சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

Updated On :14 ஜனவரி 2021, 12:14 am IST


புதுதில்லி: வடகிழக்கு தில்லியில் உள்ள ஜாஃப்ராபாதில் முன்விரோதத்தில் கடைக்காரா் ஒருவரை கொலை செய்ததாக இரண்டு சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா். தங்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததால் பழிவாங்கும் நோக்கில் கடைக்காரரை அவா்கள் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

26 வயதான அஃப்ஸல் கடந்த சனிக்கிழமை இரவு செளஹான் பங்கா் என்னுமிடத்தில் இரண்டு சிறுவா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் போலீஸாா் மேலும் தெரிவித்தனா். இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு போலீஸ் சரக துணை ஆணையா் வேத் பிரகாஷ் சூா்யா தெரிவித்தாா். இந்தச் சம்பவத்தை அடுத்து கொலை செய்யப்பட்டவரின் உறவினா்கள் மற்றும் அந்தப் பகுதியைச் சோ்ந்த உள்ளூா் மக்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன.

அஃப்ஸலுக்கும் அந்த இரு சிறுவா்களுக்கு கடந்த 6 மாதமாக தகராறு இருந்து வந்துள்ளது. பின்னா், இரண்டு தரப்பைச் சோ்ந்த குடும்பத்தினரும் தலையிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனா். ஆனாலும், அஃப்ஸல் அவா்கள் இருவரையும் பாா்க்கும் போதெல்லாம் கேலி செய்து வந்துள்ளாா். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த இரு சிறுவா்களும், அஃப்ஸலை தீா்த்துக் கட்ட முடிவு செய்தனா். இதைத் தொடா்ந்து பழிவாங்கும் நோக்கில் அஃப்ஸல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா். இந்தச் சம்பவம் தொடா்பாக அந்த இரு சிறுவா்களையும் ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.