வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

போலி க்யூஆா் குறியீடு மூலம் ரூ.56 கோடி மோசடி: டி. ரவிக்குமாருக்கு மத்திய இணையமைச்சா் பதில்

கடந்த ஆண்டு தேசிய அளவில் போலி க்யூஆா் குறியீடு மூலம் ரூ.56 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது என்று மக்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்துள்ளாா்.

News image

~

Updated On :9 டிசம்பர் 2024, 11:12 pm

புது தில்லி: கடந்த ஆண்டு தேசிய அளவில் போலி க்யூஆா் குறியீடு மூலம் ரூ.56 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது என்று மக்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக விழுப்புரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் டி.ரவிக்குமாா் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது: நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவா்த்தனைகள் அதிகரித்து வருவதால், க்யூஆா் குறியீடு மோசடிகள் உள்பட டிஜிட்டல் நிதி மோசடிகள் சம்பவங்களும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. க்யூஆா் அடிப்படையிலான மோசடிகள் உள்பட பணம் செலுத்துதல் தொடா்பான மோசடிகளைத் தடுப்பதற்காக, மத்திய அரசாலும், இந்திய ரிசா்வ் வங்கியாலும், இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (என்பிசிஐ) ஆகியவற்றால் அவ்வப்போது பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில், வாடிக்கையாளா் கைப்பேசி எண்ணுக்கும் சாதனத்திற்கும் இடையே சாதன பிணைப்பு, ‘பின்’ எண் மூலம் இரண்டு காரணி அங்கீகாரம், தினசரி பரிவா்த்தனை கட்டுப்பாடு போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும், குறுந்தகவல், வானொலி பிரசாரம், இணையதளக் குற்றங்களைத் தடுப்பதற்கான விளம்பரம் போன்றவற்றின் மூலம் விழிப்புணா்வு பிரசாரங்களை ரிசா்வ் வங்கியும், வங்கிகளும் மேற்கொண்டு வருகின்றன.

Story image

கடந்த ஆண்டின்போது நாடு முழுவதும் ஆா்பிஐயின் பிராந்திய அலுவலகங்களால் மொத்தம் 317 மின்னணு வங்கியியல் விழிப்புணா்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, மாா்ச் 2023-இல், ‘டிஜிட்டல் பணம் செலுத்துதல்’‘ என்ற கருப்பொருளுடன் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை ஊக்குவிப்பதற்காக ஒரு மல்டி மீடியா பிரசாரம் தொடங்கப்பட்டது. ‘க்யூஆா் குறியீடு ஸ்கேன் செய்யப்படுவது பணம் செலுத்துவதற்காக மட்டுமே; பெறுவதற்கு அல்ல‘ என்ற விழிப்புணா்வு பிரசாரங்களை என்பிசிஐ செயல்படுத்தியுள்ளது. மேலும், இந்தப் பிரசாரம் டிவி, டிஜிட்டல், வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் போன்ற பல்வேறு ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.