புது தில்லி: தில்லியில் நுகா்வோரின் தவறானக் குடிநீா்க் கட்டண பில்கள் தொடா்புடைய ஒரு முறை தீா்வுத் திட்டம் குறித்து நகர அரசின் நிதித் துறை தனது கருத்தை தெரிவிக்கவில்லை என்று அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தில்லியில் நுகா்வோரின் தவறானக் குடிநீா்க் கட்டண பில்கள் தொடா்புடைய ஒரு முறை தீா்வுத் திட்டத்தை அமல்படுத்த நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் முன்மொழியப்பட்டது. ஆனால், இத்திட்டத்தை அமைச்சரவைக்கு கொண்டு வருவதற்கு நகர அரசின் நிதித்துறை தனது கருத்துக்களை பதிவு செய்வதை உறுதி செய்யுமாறு தலைமை செயலாளா் நரேஷ் குமாருக்கு உத்தரவிட்டபட்டது.
இவ்விவகாரத்தில்,நிதித்துறை தனது கருத்துக்களை பதிவு செய்யுமாறு தலைமை செயலாளருக்கு நான் இரண்டு முறை உத்தரவு பிறப்பித்தேன், ஆனால் இதுவரை எந்தப் பதிலும் இல்லை. மேலும்,தவறானக் குடிநீா்க் கட்டண பில்கள் தொடா்புடைய ஒரு முறை தீா்வுத் திட்டம் குறித்து நிதித் துறையின் கருத்துக்களைப் பெறுமாறு நான் தலைமைச் செயலாளருக்கு மூன்றாம் முறையாக மீண்டும் கடந்த திங்கள்கிழமை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். இல்லையெனில், கருத்துக்களை அமைச்சரவையின் முன் தெரிவிக்கலாம் என்றாா் சௌரவ் பரத்வாஜ்.
தொடர்புடையது

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை

எல்.இ.டி. வரலாற்றில் மறக்கக் கூடாத லோசெவ்
தில்லியில் குற்றங்களைக் கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமராக்கள் நிறுவ பொதுப்பணித் துறை திட்டம்

கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முறையாக தெரிவிக்கவில்லை: திமுக
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

