மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மனைவியுடனான உறவில் விரிசல் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

மனைவியுடனான உறவில் விரிசல் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

Updated On :1 மார்ச் 2024, 4:04 pm

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த இளைஞா் சந்தன் தாஸ் (28), தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். . இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: சந்தன் தாஸின் தீவிர நடவடிக்கையின் பின்னணியில் அவரது மனைவியுடனான அவரது உறவில் உள்ள விரிசல் காரணமாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. வசந்த் குஞ்ச் வடக்கில் உள்ள இம்பீரியல் கிளப்பில் உள்ள ஆலையில் ஒரு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து அதிகாலை 2.58 மணிக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. கழிவுநீா் ஆலையில் சந்தன் தாஸ் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தாா். இரவுப் பணியில் இருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவா் தனது மனைவியுடன் தகராறு செய்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது தாயாருக்கு விடியோ கால் செய்துள்ளாா். அவரது அழைப்பை அடுத்து அவரது மனைவி மற்றும் தாயாா் இம்பீரியல் கிளப்புக்கு வந்து காவலாளிக்கு தகவல் கொடுத்தனா். குற்றப்பிரிவு போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்று அந்த அதிகாரி கூறினாா்