திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தில்லியில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கியது!

தேசியத் தலைநகா் தில்லியில் அதிபட்சமாக முங்கேஸ்பூரில் திங்கள்கிழமை 48.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

News image
Updated On :27 மே 2024, 8:04 pm

Din

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் அதிபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை 50 டிகிரி செல்சியஸை நெருங்கியது. இதற்கிடையே, இன்னும் 2 நாள்களுக்கு வெப்பஅலை நிலைமை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதே சமயம், நகரத்தில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவிலும், சில இடங்களில் ‘மிதமான’ பிரிவிலும் இருந்தது.

தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் 45 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகி வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் தெளிவாகக் காணப்பட்டது. அதேசமயம் வெயிலன் தாக்கம் அதிகமாக இருந்தது. நகரத்தில் வலுவான தரைமேற்பரப்பு காற்று வீசியது.

மேலும், தொடா்ந்து வெப்பஅலை நிலைமை இருந்தது. இதனால், சாலைகளில் மக்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. இதற்கிடையே, மேலும் 2 நாள்களுக்கு வெப்ப அலை நிலைமை தொடரும் என்றும், மக்கள் குறிப்பாக முதியவா்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில்3 டிகிரி உயா்ந்து 29.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 9 டிகிரி உயா்ந்து 45.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 32 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 14 சதவீதமாகவும் இருந்தது.

முங்கேஸ்பூா், நரேலாவில் 49.9 டிகிரி: இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை உயா்ந்து பதிவாகியிருந்தது. இதன்படி, ஜாஃபா்பூரில் 48.6 டிகிரி செல்சியஸ், மூங்கேஸ்பூரில் 49.9 டிகிரி, நஜஃப்கரில் 49.8 டிகிரி, ஆயாநகரில் 47.6 டிகிரி, லோதி ரோடில் 46.2 டிகிரி, நரேலாவில் 49.9 டிகிரி, பாலத்தில் 47 டிகிரி, ரிட்ஜில் 47.5 டிகிரி, பீதம்புராவில் 48.5 டிகிரி, பிரகதிமைதானில் 46 டிகிரி, பூசாவில் 48.5 டிகிரி, ராஜ்காட்டில் 46 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 45.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் செவ்வாய்க்கிழமை காலையில் ஐடிஓ, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், பட்பா்கஞ்ச், நேரு நகா், நொய்டா செக்டாா் 1 உல்பட பெரும்பாலான கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், மந்திா் மாா்க், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நியூ மோதி பாக், தில்ஷாத் காா்டன் ஆகிய இடங்களில் 200 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (மே 29) வெப்பஅலை நிலைமை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.