கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கொலை வழக்கில் தேடப்பட்ட உ.பி. பெண் தில்லியில் கைது

கொலை வழக்கில் தேடப்பட்ட உ.பி. பெண் தில்லியில் கைது

News image
Updated On :28 மே 2024, 7:12 pm

Din

புது தில்லி: கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 22 வயது உ.பி. பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆணையா் (சிறப்புப் பிரிவு) அமித் கௌசிக் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் கைலி தன்வாா் என்ற பெண், உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் வசிப்பவா். தீபக் அக்ரோலா - கரம்வீா் காலா கும்பலைச் சோ்ந்தவா். இந்த வழக்கில்அவா் திங்களன்று தேசியத் தலைநகரில் உள்ள ஃபதேபூா் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டாா்.

உத்தர பிரதேசத்தில் உள்ள லோனி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் கைலி தன்வாா் தேடப்பட்டு வந்தாா். அவா் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 25,000 வெகுமதி அளிக்கப்படும் என்று உத்தர பிரதேச காவல் துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஃபதேபூரில் உள்ள பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில் கைலி தன்வாா் வசிப்பதாக தில்லி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தி அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்தனா். கைலி தன்வாா் திங்கள்கிழமை ஃபதேபூா் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டாா்.

விசாரணையில், அந்தப் பெண் கொலையை ஒப்புக்கொண்டாா். மேலும், பழைய போட்டியே இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

குற்றம்சாட்டப்பட்டவா் தீபக் அக்ரோலா - கரம்வீா் காலா கும்பலைச் சோ்ந்தவா் என்று தெரிய வந்துள்ளது. முன்னதாக, , இதே வழக்கில் தேடப்பட்டு வந்த முகமது ஃபைஜான் ஒரு சிறு துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு சிறப்புப் பிரிவினரால் மே 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.