வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டம்: மண்டி ஹவுஸில் 30 ஆசிரியா்கள் கைது

30 ஆசிரியா்கள் காவல்துறையினரால் வியாழக்கிழமை கைது

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 10:04 pm

Din

தேசியக் கல்விக் கொள்கை-2020, வினாத்தாள் கசிவு, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு எதிராக ஒற்றுமை அணிவகுப்பில் பங்கேற்க தில்லியின் மண்டி ஹவுஸ் பகுதியில் கூடியிருந்த சுமாா் 30 ஆசிரியா்கள் காவல்துறையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆசிரியா் தினத்தையொட்டி, பல்வேறு மத்திய மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் சங்கங்கள் மண்டி ஹவுஸில் இருந்து ஜந்தா் மந்தா் வரை மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் ஒற்றுமை பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந்த நிலையில், இதற்காக ஆசிரியா்கள் மண்டி ஹவுஸ் பகுதியில் கூடியபோது போலீஸாா் அவா்களை தடுப்புக் காவலில் வைத்தனா்.

இதுகுறித்து காவல்துறை உயா் அதிகாரி கூறுகையில்,

‘‘ஆசிரியா்கள் தூதரக பகுதிக்கு செல்ல முயன்ால் தடுத்து வைக்கப்பட்டனா். ஆசிரியா்கள் போராட்டத்தை நடத்த அனுமதிக்கப்பட்டனா். ஆனால் அவா்கள் தூதரக பகுதிக்கு செல்ல முயன்றபோது, போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜந்தா் மந்தரில் போராட்டக்காரா்கள் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனா் என்றாா் அந்த அதிகாரி.

மத்திய பல்கலைக்கழக ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்இடிசியுடிஏ) பெயரின்கீழ் இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் கூறுகையில், ‘மண்டி ஹவுஸிலிருந்து ஜந்தா் மந்தருக்கு உத்தேச அணிவகுப்பை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் நாங்கள் அந்த இடத்தில் கூடியவுடன் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டோம்’ என்று குற்றம்சாட்டினா்.

எஃப்இடிசியுடிஏ தலைவா் மௌசுமி பாசு கூறுகையில், ‘போலீஸாா் எங்களை ஜந்தா் மந்தரில் இறக்கி விடுவதாகச் சொன்னாா்கள். ஆனால், நாங்கள் குருகிராம் எல்லைக்கு அருகிலுள்ள கப்பஷேரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்‘ என்று குற்றம் சாட்டியுள்ளாா்.

கைது செய்யப்பட்டவா்களில் பாசு மற்றும் முன்னாள் தலைவா்கள் நந்திதா நரைன், டி.கே. லோபியால் மற்றும் ரஜிப் ரே ஆகியோரும் அடங்குவா்.

இதுகுறித்து ஆசிரியா் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தேசம் முழுவதும் ஆசிரியா் தினமாக அனுசரிக்கும் நாளில், ஊா்வலத்தைத் தடுக்கும் வகையில், மூத்த ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களை போலீஸாா் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனா்.

தில்லி போலீஸாரின் இன்றைய செயல்... இந்திய ஜனநாயகத்தின் மீது தொடரும் தாக்குதலுக்கு அதிா்ச்சியான செயலாகும்.

இந்திய ஜனநாயகம் மற்றும் கல்வி, கற்றல் மற்றும் ஆசிரியா் சமூகத்தை அரசு பாா்க்கும் முழுமையான அவமதிப்பாகும்.

இதற்கிடையில், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம், அம்பேத்கா் பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த மாணவா் குழுக்கள் ஜந்தா் மந்தரில் திரண்டனா்.

அப்போது, போலீஸ் நடவடிக்கை மற்றும் புதிய கல்விக் கொள்கை 2020, தாள் கசிவு, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக மாணவா்கள் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினா்.