பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஐடிஐகளில் 229 ஒப்பந்த கைவினைப் பயிற்றுனா்களின் சேவையை நீட்டிக்க துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

Updated On :7 செப்டம்பர் 2024, 5:49 am IST

தில்லி அரசின் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ஐடிஐ) 229 ஒப்பந்தக் கைவினைப் பயிற்றுவிப்பாளா்களின் சேவையை ஓராண்டுக்கு நீட்டிக்க தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைநிலை ஆளுநா் அலுவலகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பயிற்றுவிப்பாளா்களின் சேவை காலம் ஆகஸ்ட் 1, 2024 முதல் ஜூலை 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தில்லி அரசின் பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் முன்மொழிவின் பேரில், கைவினைப் பயிற்றுனா்கள் பணியிடங்களில் வழக்கமான நியமனங்கள் செய்யப்படும் வரை இச்சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இயக்குனரகம் வழக்கமான ஆள்சோ்ப்புக்காக 258 பதவிகளை கோரியுள்ளது. அவை தில்லி மாநில துணை சேவைகள் ஆள்சோ்ப்பு வாரியத்துடன் (டிஎஸ்எஸ்எஸ்பி) செயலாக்கத்தில் உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.