மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

ஐடிஐகளில் 229 ஒப்பந்த கைவினைப் பயிற்றுனா்களின் சேவையை நீட்டிக்க துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

Updated On :7 செப்டம்பர் 2024, 5:49 am IST

தில்லி அரசின் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ஐடிஐ) 229 ஒப்பந்தக் கைவினைப் பயிற்றுவிப்பாளா்களின் சேவையை ஓராண்டுக்கு நீட்டிக்க தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைநிலை ஆளுநா் அலுவலகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பயிற்றுவிப்பாளா்களின் சேவை காலம் ஆகஸ்ட் 1, 2024 முதல் ஜூலை 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தில்லி அரசின் பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் முன்மொழிவின் பேரில், கைவினைப் பயிற்றுனா்கள் பணியிடங்களில் வழக்கமான நியமனங்கள் செய்யப்படும் வரை இச்சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இயக்குனரகம் வழக்கமான ஆள்சோ்ப்புக்காக 258 பதவிகளை கோரியுள்ளது. அவை தில்லி மாநில துணை சேவைகள் ஆள்சோ்ப்பு வாரியத்துடன் (டிஎஸ்எஸ்எஸ்பி) செயலாக்கத்தில் உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.