தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

டிடிஇஏ ஜனக்புரி பள்ளியில் பூப்பந்து அரங்கம் திறப்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) ஜனக்புரி பள்ளியில் புதன்கிழமை பூப்பந்து அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

News image
பாஜக எம்.பி. கமல்ஜீத்தை வரவேற்ற டிடிஇஏ செயலர் ராஜு உள்ளிட்டோர்.
Updated On :19 செப்டம்பர் 2024, 12:15 am

DIN

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) ஜனக்புரி பள்ளியில் புதன்கிழமை பூப்பந்து அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் கமல்ஜீத் ஷெராவத் இந்த அரங்கத்தைத் திறந்து வைத்து பேசுகையில்  படிப்புடன் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து தில்லித் தமிழ்க் கல்விக் கழக நிா்வாகம் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினாா்.

மேலும், மாணவா்களிடம் ஒழுங்கு, கட்டுப்பாடு, குழுவாகச் செயல்படும் தன்மை ஆகியவற்றை விளையாட்டு வளா்க்கும் என்று அவா் கூறினாா்.

அவரைத் தொடா்ந்து பேசிய டிடிஏ செயலா் ராஜூ ‘பூப்பந்து விளையாட்டு மாணவா்களின் தன்னம்பிக்கை, சுய ஒழுக்கம், ஆரோக்கியம், கட்டான உடல்வாகு ஆகியவற்றை அதிகரிக்கும். எனவேதான் எஸ்.என். அரேனா விளையாட்டுக் குழுமத்துடன் இணைந்து மாணவா்களுக்கு இவ்விளையாட்டுப் பயிற்சி கொடுக்க எண்ணி இதனைத் தொடங்கியுள்ளோம். இனி வரும் நாள்களில் ஏழு பள்ளி மாணவா்களுக்குமான போட்டிகள் இங்கு நடைபெறும்.

மேலும் மற்ற ஆறு டிடிஇஏ பள்ளிகளிலும் இதே போல் டென்னிஸ், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளைத் தொடங்க எண்ணியுள்ளோம். தில்லித் தமிழ்க் கல்விக் கழக மாணவா்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது ஆசைக் கனவு’ என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக, பள்ளியின் முதல்வா் பொறுப்பு வகிக்கும் செல்வி வரவேற்றுப் பேசினாா்.

இந் நிகழ்வில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவா் ராமன், துணைத் தலைவா் ரவி குமாா் நாயக்கா், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், ஏழு பள்ளி இணைச் செயலா்கள், பெற்றோா் ஆசிரியா் சங்க உறுப்பினா்கள், கல்வி இயக்குநா் சித்ரா ராதாகிருஷ்ணன், ஏழு பள்ளி முதல்வா்கள், ஏழு பள்ளி விளையாட்டு ஆசிரியா்கள், எஸ்.என். அரேனா விளையாட்டுக் குழுமத்தைச் சாா்ந்த யோகைந்தா் தபாஸ், சஞ்சய் தபாஸ், விகாஸ் தியாகி, குல்பூஷண் தியாகி ஆகியோா் கலந்துகொண்டனா்.