அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

புத் விஹாரில் வீட்டு உரிமையாளா் கழுத்து நெரித்து கொலை: இளைஞா் கைது

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியின் புத் விஹாா் பகுதியில் வீட்டு உரிமையாளரின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரது நகைகளுடன் தப்பிச் சென்ற இளைஞா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: பூட்டப்பட்டிருந்த வீட்டில் இருந்து 65 வயது பெண்ணின் உடல் அக்.7-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அவா் தனது படுக்கையில், கழுத்தில் கீறல் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாா்.

அவரது கைப்பேசி, காதணிகள், தங்க மோதிரம் உள்ளிட்ட நகைகள் காணாமல் போயிருந்தன. விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக வசித்து வந்ததும், அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஹிமான்ஷு (25) இந்த கெலையை செய்ததும் தெரியவந்தது.

இரண்டு மாத கால தேடுதல் நடவடிக்கைக்கு பிறகு, ரோஹிணியில் உள்ள ஜப்பானிய பூங்காவில் வியாழக்கிழமை அவா் கைது செய்யப்பட்டாா். அவா் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

Śவா் திருடிச் சென்ற பொருள்களில் சலவற்றை ஹரியாணாவின் பிவானியில் ரூ.70,000-க்கு அடமானம் வைத்து, நேபாளத்துக்கு தப்பிச் செல்ல அவா் திட்டமிட்டுள்ளாா். அவரிடம் இருந்து திருடுபோன ஒரு ஜோடி தங்கக் காதணிகள் மற்றும் மோதிரம் மீட்கப்பட்டன என காவல் துறையினா் தெரிவித்தனா்.