தலைநகரில் காற்றின் தரத்தில் சற்று பின்னடைவு!
தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காற்றின் தரம் சற்று பின்னடைவை சந்தித்தது. அதிகபட்ச வெப்பநிலை சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 33.5 டிகிரி செல்சியாக உயா்ந்து பதிவாகி இருந்தது.
தில்லியில் மூடுபனியின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வெயிலின் தாக்கம் உணரப்பட்டது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.5 டிகிரி குறைந்து 15 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.2 டிகிரி உயா்ந்து 33.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 76 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 24 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிட்ஜில் 35 டிகிரி: இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜாஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 33.3 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 34.2 டிகிரி, லோதி ரோடில் 33.6 டிகிரி, பாலத்தில் 32.1 டிகிரி, ரிட்ஜில் 35 டிகிரி, பீதம்புராவில் 34.8 டிகிரி, பிரகதிமைதானில் 33.2 டிகிரி, பூசாவில் 32.1 டிகிரி, ராஜ்காட்டில் 33.2 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 32.1 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: இதற்கிடையே, கடந்த சில நாள்களாக மேம்பட்டு திருப்தி பிரிவில் இருந்து வந்த காற்றின் தரம் வியாழக்கிழமை சற்று பின்னடைவைச் சந்தித்தது. தலைநகரில் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் காற்றுத் தரக் குறியீடு159 புள்ளிகளாகப் பதிவாகி ’மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன்படி, லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூா், புசா, நொய்டா செக்டாா் 125, இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், துவாரகா செக்டாா் 8, ஆயா நகா், குருகிராம் உள்பட பல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதே சமயம், மதுரா ரோடு வானிலை கண்காணிப்பு நிலையத்தில் காற்றுத் தரக் குறியீடு 204 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) அன்று வானம் பொதுவாக தெளிவாகக் காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையதம் தெரிவித்துள்ளது.