மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தில்லியில் மோசம் பிரிவில் காற்றின் தரம்!

தேசிய தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் மோசம் பிரிவில் காணப்பட்டது. நகரில் அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது.

News image

தில்லியில் காற்றின் தரம். - கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 7:07 pm

தேசிய தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் மோசம் பிரிவில் காணப்பட்டது. நகரில் அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது. இது பருவகால சராசரியை விட 7.2 டிகிரி அதிகமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.7 டிகிரி அதிகமாக 16.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

சனிக்கிழமை, நகரில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் மாா்ச் முதல் வாரத்தில் மிகவும் வெப்பமான நாள் பதிவாகி இருந்தது. பகல்நேர வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியஸை எட்டியது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி அளவில் காற்றில் ஈரப்பதம் 90 சதவீதமாகவும் மாலை 5.30 மணி அளவில் 29 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, நகரில் காற்றின் தரம் மாலை 4 மணி நிலவரப்படி மோசம் பிரிவில் இருந்தது. காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு 247 ஆக இருந்தது.

திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 37 மற்றும் 17 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும் ஐஎம்டி கணித்துள்ளது.