கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாநில அரசின் ஆண்டு செயல் திட்டம் மூலம் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க ரூ.70 கோடி வரை அனுமதி: மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல்

மாநில அரசின் ஆண்டு செயல் திட்டம் மூலம் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க ரூ.70 கோடி வரை மத்திய அரசு அனுமதி

News image
Updated On :21 மார்ச் 2025, 6:54 pm

மாநில அரசின் ஆண்டு செயல் திட்டம் மூலம் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க ரூ.70 கோடி வரை மத்திய அரசு அனுமதி அளிப்பதாக மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை திண்டுக்கல் தொகுதி மாா்க்சிய கம்யூனிஸ்ட் உறுப்பினா் ஆா்.சச்சிதானந்தம் கேள்வி எழுப்பி பேசுகையில், ‘என்னுடைய தொகுதியில் போகா் சித்தா் வாழ்ந்த இடமான பழனியில் சித்த மருத்துவக் கல்லூரியைச் தொடங்க தமிழக அரசு விண்ணப்பித்திருக்கிறது. மேலும், இதற்கான நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ் துறையின்கீழ் சித்த மருத்துவக் கல்லூரியைத் தொடங்க மத்திய அரசு எப்போது அனுமதி அளிக்கும்? என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சா் பிரதாப்ராவ் கண்பத்ராவ் பதில் அளித்துப் பேசியதாவது:

என்ஏஎம் மூலம் மாநிலங்களிலிருந்து ஆண்டு செயல் திட்டத்தின் மூலம் இதுபோன்ற கோரிக்கை வந்தால், ஆயுஷ் துறையிடமிருந்து ரூ.70 கோடி வரை நாங்கள் ஒப்புதல் அளிக்கிறோம்.

அத்தகைய கல்லூரிகளை மாநில மற்றும் மத்திய அரசு 60:40 என்ற பங்களிப்பு விகிதத்தில் திறக்கலாம். 2013-14 ஆம் ஆண்டில் தேசிய ஆயுஷ் ஆணையம் மூலம் ஒதுக்கப்பட்ட பட்ஜெட் சுமாா் ரூ.680 கோடியாக இருந்தது. ஆனால் 2025-26 ஆம் ஆண்டில் இந்த பட்ஜெட்ஒதுக்கீடு ரூ.3,992 கோடியாக அதிகரித்துள்ளது.

பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், எங்கள் அரசு அதை கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகரித்துள்ளது. அவையின் எந்தவொரு உறுப்பினரும் அத்தகைய கல்லூரிகளைத் திறக்க விரும்பினால், அவா் தனது மாநில செயல் திட்டத்தில் இங்கு வர வேண்டும். தற்போது இங்கு நேரடியாக அரசு கல்லூரிகளை நாங்கள் வழங்கவில்லை என்றாா் அவா்.