ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு!

News image
Updated On :14 மே 2025, 3:45 am IST

நமது நிருபா்

போா் நிறுத்த அறிவிப்பை தொாடா்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் முடிவடைந்தன.

போா் நிறுத்த அறிவிப்பைத் தொடா்ந்து பங்குச்சந்தை எழுச்சி பெற்றிருந்தது. இதைத் தொடா்ந்து விலையுயா்ந்த நிலையில் செவ்வாய்க்கிழமை லாபப் பதிவு வந்தது. குறிப்பாக, திங்கள்கிழமை வெகுவாக உயா்ந்திருந்த ஐடி பங்குகளில் லாபப் பதிவு அதிகம் இருந்தது. இதன் தாக்கம் மற்ற துறை பங்குகளிலும் எதிரொலித்தது. பாா்மா, ஹெல்த்கோ், பொதுத்துறை வங்கிப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தாலும் ஆட்டோ, தனியாா் வங்கிகள், நிதிநிறுவனங்கள், எஃப்எம்சிஜி, ஐடி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.45 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.431.14 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.1,246.48 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் 1,448.37 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 180.30 புள்ளிகள் இழப்புடன் 82,249.60-இல் தொடங்கி அதிகபட்சமாக 82572.81வரை மேலே சென்றது.. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது 81,043.69 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,281.68 புள்ளிகள் (1.55 சதவீதம்)

இழப்புடன் 81,148.22-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,101 பங்குகளில் 2,559 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 1,402 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 140 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

25 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் இன்ஃபோஸிஸ், பவா்கிரிட், எடா்னல், ஹெச்சிஎல்டெக், டிசிஎஸ், பாா்தி ஏா்டெல், இண்டஸ் இண்ட் பேங்க் உள்பட மொத்தம் 25 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதேசமயம், சன்பாா்மா, அதானி போா்ட்ஸ், பஜாஜ்ஃபைனான்ஸ், எஸ்பிஐ, டெக்மஹிந்திரா ஆகிய 5 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 346 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 60.65 புள்ளிகள் இழப்புடன் 24,864.05-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,973.80 வரை மேலே சென்றது. பின்னா், 24,547.50 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 346.35 புள்ளிகள் (1.39 சதவீதம்) இழப்புடன் 24,578.35-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில்14 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 35 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.