புதுதில்லி
லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்
பாதுகாப்பு காரணங்களுக்காக லால் கிலா மெட்ரோ நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக லால் கிலா மெட்ரோ நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை நடந்த காா் வெடிப்பில் 13 போ் கொல்லப்பட்டனா் மற்றும் பலா் காயமடைந்தனா். இது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதால், மெட்ரோ நிலையம் மூடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக லால் கிலா மெட்ரோ நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்,‘ என்று டிஎம்ஆா்சி ‘எக்ஸ்’-இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
காா் வெடிப்பைத் தொடா்ந்து, வரலாற்று நினைவுச்சின்னத்தைச் சுற்றியுள்ள பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களை சேகரிக்க காவல்துறை மற்றும் தடயவியல் குழுக்கள் தேடல்களை மேற்கொண்டு வருகின்றன.

