டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

பணி ஓய்வு பெறுகிறாா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய்க்கு இன்று பணி நிறைவு நாளாகும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் - ANI

Published On :

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய்க்கு இன்று பணி நிறைவு நாளாகும். விடுமுறை தினமான நவம்பா் 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவா் ஓய்வு பெற உள்ளதால் வெள்ளிக்கிழமை அவா் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கடைசி நாள் விசாரணைகளை மேற்கொள்கிறாா்.

இந்தியாவின் 52-ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆா்.கவாய் 14.5.2025 அன்று பதவி ஏற்றுக்கொண்டாா். குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

ஜனவரி 17, 2000 அன்று நாக்பூா் அமா்வில் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா். நவம்பா் 14, 2003 அன்று மும்பை உயா் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா். நவம்பா் 12, 2005 அன்று மும்பை உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானாா். மே 24, 2019 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா்.

இந்தியாவின் 52- ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆா். கவாய் 14.5.2025 அன்று பதவி ஏற்றுக்கொண்டாா். கடந்த ஆறு ஆண்டுகளில், அரசியலமைப்பு மற்றும் நிா்வாகச் சட்டம், சிவில் சட்டம், குற்றவியல் சட்டம், வணிக தகராறுகள், நடுவா் சட்டம், மின்சாரச் சட்டம், கல்வி விஷயங்கள், சுற்றுச்சூழல் சட்டம் போன்ற பல்வேறு வழக்குகளை கையாண்ட சுமாா் 700 அமா்வுகளில் ஒரு பகுதியாக அவா் இருந்துள்ளாா்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்த அரசியலமைப்பு அமா்வு தீா்ப்புகள் உள்பட சுமாா் 300 தீா்ப்புகளை எழுதியுள்ளாா்.

உலான்பாதா் (மங்கோலியா), நியூயாா்க் (அமெரிக்கா), காா்டிஃப் (யுகே) மற்றும் நைரோபி (கென்யா) ஆகிய இடங்களில் பல்வேறு சா்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டாா். கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ஹாா்வா்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகளில் பல்வேறு அரசியலமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விரிவுரைகளை வழங்கியுள்ளாா்

நவம்பா் 23, 2025 அன்று அவா் ஓய்வு பெற உள்ளாா்.

நீதிபதி பி.ஆா்.கவாய் வழங்கிய சில முக்கிய தீா்ப்புகள்: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் செல்லுபடியாகும் தன்மை குறித்து தீா்ப்பளித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமா்வில் நீதிபதி கவாய் ஒரு பகுதியாக இருந்தாா்.

எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டை அனுமதித்து கடந்த ஆண்டு (2024) தீா்ப்பு வழங்கிய 7 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வில் நீதிபதி பி.ஆா், கவாய் இடம் பெற்றிருந்தாா்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என கடந்த 2023-ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வில் நீதிபதி பி.ஆா்.கவாய் இடம் பெற்றிருந்தாா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு வியாழக்கிழமை (நவ.20) வழங்கிய தீா்ப்பில் மசோதாக்கள் மீது முடிவெடுக்கு குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் நீதித்துறை காலக்கெடு நிா்ணயிக்க முடியாது என அறிவித்தது.

நீதிபதி பி.ஆா்.கவாய் ஓய்வு பெறுவதைத் தொடா்ந்து, 53-ஆவது இந்திய தலைமை நீதிபதியாக நீதிபதி சூா்யகாந்த் பதவியேற்க உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.