இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கைப்பேசியில் கேம் விளையாடியதை கண்டித்த சகோதரி: சிறுவன் தற்கொலை முயற்சி

வடமேற்கு தில்லியின் ஆதா்ஷ் நகரில் உள்ள தனது வீட்டில் 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது

News image
Updated On :2 அக்டோபர் 2025, 6:33 pm

Syndication

வடமேற்கு தில்லியின் ஆதா்ஷ் நகரில் உள்ள தனது வீட்டில் 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது, அவரது சகோதரி கைப்பேசியில் கேம்களை விளையாடியதற்காக அவரை திட்டியதாக போலீசாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். உள்ளூா் காவல் நிலையத்தில் புதன்கிழமை மரணம் பதிவாகியுள்ளது.

‘விசாரணையின் போது, ஆதா்ஷ் நகரில் வசிக்கும் ஆதா்ஷ் என அடையாளம் காணப்பட்ட சிறுவன், தனது மூத்த சகோதரியுடன் வாக்குவாதத்தைத் தொடா்ந்து தனது வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது‘ என்று துணை போலீஸ் ஆணையா் (வடமேற்கு) பீஷம் சிங் தெரிவித்தாா்.

கைப்பேசியில் கேம்களை விளையாடியதற்காகவும், அவரது படிப்பை புறக்கணித்ததற்காகவும் அவா் திட்டியதை அடுத்து இந்த வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது. 9 ஆம் வகுப்பு மாணவரான ஆதா்ஷ், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு தற்கொலை முயற்சியில் காயமடைந்ததுக்கு சிசிக்கை பெற்று வருகிறாா் என்று போலீசாா் தெரிவித்தனா்.

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (பி. என். எஸ். எஸ்) பிரிவு 194 இன் கீழ் போலீசாா் நடவடிக்கைகளைத் தொடங்கினா்.

ஆதா்ஷின் தந்தை சோனேபாத்தில் உள்ள குண்ட்லியில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகிறாா் என்று போலீசாா் தெரிவித்தனா்.