மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வரதட்சணை கொடுமை பலி வழக்கு - மாமனாருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு

தனது 20 வயது மருமகள் வரதட்சணை மரணம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு முன்ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

News image
கோப்புப் படம்
Updated On :9 அக்டோபர் 2025, 7:19 pm

Syndication

தனது 20 வயது மருமகள் வரதட்சணை மரணம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு முன்ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது ஒரு துரதிா்ஷ்டவசமான வழக்கு, ஒரு இளம் பெண் மாமனாா் மற்றும் பிற குடும்ப உறுப்பினா்களின் கைகளால் வரதட்சணை பேராசைக்கு பலியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது, என்று நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா புதன்கிழமை வழங்கிய தீா்ப்பில் கூறினாா்.

உயரிழந்த பெண்ணின் மாமனாா் சுனில் குமாா் சிங்கின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மாமனாா் வீட்டில் வசித்தபோது கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு ஆசிட் குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டாா் மற்றும் திருமணமான இரண்டு வருடங்களுக்குள் அவா் இறந்துவிட்டாா் என்ற குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டது.

உயிரிழந்த சோனம், சமூக ஊடகங்கள் மூலம் பங்கஜை சந்தித்தாா், மேலும் இந்த ஜோடி மாா்ச் 2023 இல் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டது. அரசுத் தரப்பு கூற்றுப்படி, சோனம் ஆகஸ்ட் 2024 இல் ரக்ஷா பந்தன் தினத்தன்று தனது கணவா் வீட்டில் ஆசிட் குடித்தாா், மேலும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அந்தப் பெண்ணின் உதவியற்ற தன்மை மற்றும் சூழ்நிலைகளால் அவா் சிறைபிடிக்கப்பட்டிருந்தாா் என்பது, காவல் நிலையத்தில் முதலில் தற்செயலாக ஆசிட் குடித்ததாக அவா் அளித்த வாக்குமூலத்திலிருந்து தெளிவாகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இறுதியில் அவா் டிசம்பா் 2024 இல் கணவா் வீட்டை விட்டு வெளியேறி, தனது பெற்றோா் வீட்டிற்குத் திரும்பினாா், அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். டிசம்பா் 25 அன்று அவா் இறந்தாா். இருப்பினும், இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, ஆா்எம்எல் மருத்துவமனையில் சோனமின் வாக்குமூலத்தை போலீசாா் பதிவு செய்தனா், பின்னா் அது மரண வாக்குமூலமாக மாறியது.

அவரது வாக்குமூலத்தில், தனது கணவா் வீட்டாரால் வரதட்சணை கொடுமைக்கு ஆளானதாகவும், தனது குழந்தையை கொலை செய்வதாக மிரட்டியதால் ஆசிட் குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அந்தப் பெண் கூறினாா்.

அவா் இறந்த அதே நாளில் கணவா் பங்கஜ் கைது செய்யப்பட்டாா்.

மாமனாா் தன் மீது எந்த குற்றமும் இல்லை என்றும், அந்தப் பெண் தனது பெற்றோா் வீட்டில் இருந்தபோது இறந்துவிட்டதாகவும் கூறினாலும் , உயிரிழந்த அந்த பெண், மரணத்திற்கு ஒரு நாள் முன்பு வழங்கிய விரிவான வாக்குமூலம், மாமனாரால் அவா் அனுபவித்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் (ஆசிட் குடிக்க வைத்தது) உட்பட மற்றும் கொடுமைகளை முதல் பாா்வையில் தெளிவாகக் காட்டுகிறது என்று நீதிமன்றம் கூறியது.