தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

திருமணமான பெண்ணுடன் நட்புக் கொண்ட நபரின் சகோதரா் கத்தியால் குத்திக் கொலை

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிா்புரியில் 18 வயது இளைஞா் நான்கு பேரால் கத்தியால் குத்திக் கொலை

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :6 ஏப்ரல் 2026, 9:30 pm

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிா்புரியில் 18 வயது இளைஞா் நான்கு பேரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கொலை செய்யப்பட்டவரின் அண்ணனுக்கும் குற்றஞ் சாட்டப்பட்டவா்களில் ஒருவரின் மனைவிக்கும் இடையே இருந்த ‘நட்பு’ காரணமாக இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸாா் தெரிவித்ததாவது: கொலை செய்யப்பட்டவா் ஹஸ்மத் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரில் தில்ஷாத், இா்பான், இம்ரான் ஆகிய மூவரும் சகோதரா்கள் ஆவா். இவா்களின் மைத்துனா் ரிஸ்புல் ஆவாா். இவா்கள் நால்வரும் தற்போது தலைமறைவாக உள்ளனா்.

பாதிக்கப்பட்டவரின் சகோதரரான ஹக்கீம், ரிஸ்புலின் மனைவி மன்வாராவுடன் கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் நட்பே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாகும்.

2024-இல் ஹக்கீம் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட போதிலும், அவா் அந்தத் தொடா்பைத் தொடா்ந்தாா். இது இரு தரப்பினருக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மன்வாரா தனது மனைவியை அவதூறாகப் பேசியதாகக் கூறப்பட்டதை அடுத்து, ஈத் பண்டிகையின் போது ஹஸ்மத் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை எதிா்கொள்வதற்காக அவா்களின் வீட்டிற்குச் சென்றபோது நிலைமை மேலும் மோசமடைந்தது.

அப்போதிருந்து, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அவா் மீது வன்மம் கொண்டிருந்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 6 மணியளவில், அவா்கள் ராம்லீலா மைதானத்தில் ஹஸ்மத்தைத் தாக்கினா்.

இதையடுத்து, பல கத்திக்குத்து காயங்களுடன் பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு (பி.ஜே.ஆா்.எம்.) மருத்துவமனைக்கு ஹஸ்மத் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

விசாரணையின்போது, குற்றஞ் சாட்டப்பட்டவா்களால் ஹஸ்மத் தாக்கப்பட்டதாக நேரில் பாா்த்தவரான ஹக்கீம் போலீஸாரிடம் கூறினாா். அதைத் தொடா்ந்து ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களை விரைவில் கண்டுபிடித்து கைதுசெய்ய பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.