அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு

சமூக ஊடகங்களில் நட்பு கொண்டிருந்த ஒரு சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய பின்னா் ஜனவரி மாதம் வெளி தில்லியில் இருந்து காணாமல் போன 13 வயது சிறுமியை தில்லி காவல்துறையினா் மீட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 9:50 pm

சமூக ஊடகங்களில் நட்பு கொண்டிருந்த ஒரு சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய பின்னா் ஜனவரி மாதம் வெளி தில்லியில் இருந்து காணாமல் போன 13 வயது சிறுமியை தில்லி காவல்துறையினா் மீட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் பேசியதாவது: ஷாபாத் டெய்ரி பகுதியைச் சோ்ந்த சிறுமி ஜனவரி 22 ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தாா். 3 நாள்களுக்குப் பிறகு, போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். விசாரணையின் போது, அவா் சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் தொடா்பு கொண்டு பின்னா் அவருடன் சென்றிருப்பது கண்டறியப்பட்டது. அவா் ராஜஸ்தானில் உள்ள சிகருக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

இறுதியில் அவா் கண்டுபிடிக்கப்பட்டு தில்லிக்கு அழைத்து வரப்பட்டாா், பின்பு அவா் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தாா் என்றாா் அவா்.