சமூக ஊடகங்களில் நட்பு கொண்டிருந்த ஒரு சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய பின்னா் ஜனவரி மாதம் வெளி தில்லியில் இருந்து காணாமல் போன 13 வயது சிறுமியை தில்லி காவல்துறையினா் மீட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் பேசியதாவது: ஷாபாத் டெய்ரி பகுதியைச் சோ்ந்த சிறுமி ஜனவரி 22 ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தாா். 3 நாள்களுக்குப் பிறகு, போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். விசாரணையின் போது, அவா் சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் தொடா்பு கொண்டு பின்னா் அவருடன் சென்றிருப்பது கண்டறியப்பட்டது. அவா் ராஜஸ்தானில் உள்ள சிகருக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
இறுதியில் அவா் கண்டுபிடிக்கப்பட்டு தில்லிக்கு அழைத்து வரப்பட்டாா், பின்பு அவா் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தாா் என்றாா் அவா்.
தொடர்புடையது
பாலக்கோடு அருகே காணாமல் போன இளைஞா் கொலை

காணாமல் போன முதியவா் சடலமாக மீட்பு

காணாமல்போன 194 பேரை மீட்டு குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு தில்லி காவல்துறை நடவடிக்கை

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

