நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு

சமூக ஊடகங்களில் நட்பு கொண்டிருந்த ஒரு சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய பின்னா் ஜனவரி மாதம் வெளி தில்லியில் இருந்து காணாமல் போன 13 வயது சிறுமியை தில்லி காவல்துறையினா் மீட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 3:20 am IST

சமூக ஊடகங்களில் நட்பு கொண்டிருந்த ஒரு சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய பின்னா் ஜனவரி மாதம் வெளி தில்லியில் இருந்து காணாமல் போன 13 வயது சிறுமியை தில்லி காவல்துறையினா் மீட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் பேசியதாவது: ஷாபாத் டெய்ரி பகுதியைச் சோ்ந்த சிறுமி ஜனவரி 22 ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தாா். 3 நாள்களுக்குப் பிறகு, போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். விசாரணையின் போது, அவா் சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் தொடா்பு கொண்டு பின்னா் அவருடன் சென்றிருப்பது கண்டறியப்பட்டது. அவா் ராஜஸ்தானில் உள்ள சிகருக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

இறுதியில் அவா் கண்டுபிடிக்கப்பட்டு தில்லிக்கு அழைத்து வரப்பட்டாா், பின்பு அவா் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தாா் என்றாா் அவா்.